20 வருடமாக இயக்காத SJ சூர்யா.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

சினிமாவில் நடிகர் ஆகிய சிலருக்கு இயக்குனர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் இயக்குனர் ஆகிய பலருக்கு நடிகராக ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் அப்படிதான் முதலில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சினிமாவிற்கு வந்தவர் எஸ் ஜே சூர்யா.

ஆரம்பத்தில் இவர் சினிமாவில் நடிகராக வேண்டும் என்பதற்காக பலர் இயக்குனரிடமும் வாய்ப்பு கேட்டு வந்துள்ளார். ஆனால் யாரும் பெரிதளவு வாய்ப்பு கொடுக்காததால் வேறுவழியின்றி இயக்குனர் ஆனால் தானாகவே தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில்தான் இயக்குனர் ஆகியுள்ளார்.

முதலில் வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்தார். அதன் பிறகு படங்களை இயக்குவதற்கான பெரிதளவு வாய்ப்புகள் குவிந்தன. அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு காலத்தில் பிரபல இயக்குனராக வலம் வந்தார். அப்போது எஸ் ஜே சூர்யா வின் படங்களின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. அதனால் தொடர்ந்து பல நடிகர்கள் எஸ் ஜே சூர்யா படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டினர்.

இவர் கடைசியாக 2000 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக வெற்றி அடைந்த குஷி படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் எந்த நடிகரை வைத்தும் எஸ் ஜே சூர்யா படங்கள் இயக்கவில்லை. அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

அதாவது சினிமாவில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்தேன் அது தற்போதுதான் நிறைவேறி வருகிறது. எப்படி சில ஆண்டுகள் இயக்குனராக நான் வெற்றி பெற்றதோ அதே போல நடிகராக சில ஆண்டுகள் வெற்றி அடைய வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் விஜய்க்காக ஒரு கதை வைத்திருப்பதாகவும் தனது நடிப்பு ஆசை முடிந்த பிறகு கண்டிப்பாக விஜயை வைத்து ஒரு படத்தை இயக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். அதனால் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறிவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்