நன்றியை மறக்காத எஸ் ஜே சூர்யா.. இன்று வரை பாதுகாக்கும் அந்தப் பரிசு

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ் ஜே சூர்யா. தன்னுடைய முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை பெற்று இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

அந்த திரைப்படத்தை இயக்கும் பொழுது எஸ் ஜே சூர்யா படப்பிடிப்புக்கு தினமும் நடந்து தான் வருவாராம். அப்படி வரும்போது என்றாவது ஒரு நாள் படப்பிடிப்புக்கு தாமதமாகி விட்டால் உடனே யாரிடமாவது லிப்ட் கேட்டு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து விடுவாராம்.

அதற்கு பின்னர் படப்பிடிப்பு முடிந்து படத்தில் இடம்பெறும் பாடல்களை எல்லாம் நடிகர் அஜீத் கேட்டிருக்கிறார். அந்த பாடல்கள் அனைத்தும் சிறப்பாக வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த அஜித், எஸ் ஜே சூர்யாவுக்கு யமஹா பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறார்.

அதன்பிறகு திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனால் நடிகர் அஜீத் மீண்டும் எஸ் ஜே சூர்யாவுக்கு ஒரு சான்ட்ரோ காரை பரிசளித்துள்ளார். இந்த இரண்டு பரிசையும் அவர் அஜித் மீது கொண்ட மரியாதையின் காரணமாக தற்போது வரை பாதுகாப்பாக வைத்துள்ளார்.

வாலி திரைப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா, குஷி திரைப்படத்தில் நடிகர் விஜய்யை வைத்து இயக்கினார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது அதற்குப் பிறகு நியூ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் டான், கடமையைச் செய், பொம்மை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்