அப்பாவைப் பெருமைப்படுத்திய சிவகார்த்திகேயன்.. அப்படி என்ன செஞ்சிருக்காரு பாருங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து பல இயக்குனர்களும் சிவகார்த்திகேயனை வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

ஆரம்ப காலத்தில் சினிமாவில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஏற்படும் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இருப்பினும் இப்படம் பெரிய அளவு கைகொடுக்கவில்லை ஆனால் தனுசுடன் இணைந்து சிவகார்த்திகேயன் 3 படத்தில் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு தொடர்ந்து தனுஷ் மூலம் எதிர்நீச்சல் படத்தில் நடித்து மீண்டும் வெற்றிகண்டார். இப்படம் தான் இவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. அதன்பிறகு நடித்த ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தாலும் சில படங்கள் வெற்றி அடைந்தன.

சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் படங்களை தாண்டியும் மற்ற இயக்குனர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் கூட வால் எனும் படத்தை தயாரித்திருந்தார். மேலும் இவரது டாக்டர் திரைப்படத்தையும் பல நாட்களாக திரையரங்கில் வெளியாகும் என கூறிவந்தனர். ஆனால் தற்போது ஓட்டிட்டு தளத்திற்கு கொடுத்துள்ளனர்.

சிவகார்த்திகேயனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும் ஆராதனா என்ற பெண் குழந்தையும் இருந்தன. தற்போது இவருக்கு இரண்டாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளிப்படையாக தெரிவித்தார். தற்போது இவரது குழந்தைக்கு பெயர் சூட்டியது குறிப்பிட்டுள்ளார்.

sivakarthikeyan
sivakarthikeyan

அதாவது சிவகார்த்திகேயனின் தந்தையின் பெயரான தாஸ் பெயரை இணைத்து அவரது மகனுக்கு “குகன் தாஸ்” என பெயரிட்டுள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்