முதல் 5 இடத்திற்குள் வந்ததை பற்றி என்ன நினைக்கிறீங்க.. ஓபனாக பேசிய சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் ஒரு ஸ்டாண்டப் காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தற்போது அசுர வேகத்தில் முன்னேறி தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஒரு நடிகராக உருவெடுத்துள்ளார். சினிமா பின்புலம் கொண்ட பல நடிகர்களும் சினிமாவில் தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கும் போது, எந்த பின்புலமும் இல்லாத சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

அந்த வகையில் இவருக்கு குழந்தைகள் உட்பட ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களுக்கு இணையாக அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராகவும் இவர் இருக்கிறார். இவ்வளவு புகழும், பிரபலமும் இருந்தாலும் இவர் மிகவும் எளிமையான மனிதராக இருக்கிறார்.

சமீபத்தில் இவர் மீடியாவுக்கு அளித்த பேட்டியில் பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது. இவரின் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் அந்த திரைப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் அவரிடம் முன்னணி நடிகராக டாப் 5 இடத்தை பிடித்திருப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், எனக்கு மக்கள் மனதில் இடம் கிடைத்தால் போதும். மற்றபடி இது போன்ற வெற்றியை நாம் தலையில் ஏற்றிக் கொண்டால் தேவையில்லாமல் போட்டி, பொறாமை போன்ற விஷயங்கள் தான் வரும்.

ஒருவருடைய வெற்றி என்பது அவர் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார் என்பதை குறிப்பது கிடையாது. அது அவர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை தான் குறிக்கிறது. அதனால் இந்த டாப் இடங்களைப் பற்றி நான் கருத்தில் கொள்வது கிடையாது என்று மிகவும் தன்னடக்கத்துடன் பேசியிருக்கிறார்.

அவருடைய இந்தக் கருத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது சிவகார்த்திகேயன் தன்னுடைய வெற்றியால் தலைகணம் ஏறி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் என்றே தெரிகிறது. அவருடைய இந்த முதிர்ச்சியான பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்