சிவகார்த்திகேயனுக்கு நோ.. உதயநிதிக்கு ஓகே சொன்ன வடிவேலு.. காரணம் என்ன?

கோலிவுட்டின் காமெடி கிங்காக வலம் வந்த நடிகர் வடிவேலு இடையில் ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட கடந்த நான்கு ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் தான் இந்த பிரச்சனைகள் முடிவடைந்து தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுதவிர மேலும் ஒரு சில படங்களில் நாயகனாக நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். வடிவேலு கம்பேக் கொடுத்தவுடன் ஏராளமான பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ஆனால் மனுஷன் இனி நான் நடித்தால் ஹீரோவா தான் நடிப்பேன் காமெடி ரோல் வேண்டாம் என கூறி அத்தனை வாய்ப்பையும் மறுத்து விட்டாராம்.

அவ்வளவு ஏன் சமீபத்தில் கூட இளம் நடிகர் சிவகார்த்திகேயன் அவரது படத்தில் எப்படியாவது வடிவேலுவை நடிக்க வைக்க வேண்டும் என பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் வடிவேலுவோ அவரின் பிடியில் சிக்காமல் முடியாது என கறாராக கூறி விட்டார். இந்நிலையில் வடிவேலு மாரி செல்வராஜ் மற்றும் உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில், படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என கூறிய வடிவேலு அவரின் கொள்கையை தளர்த்தி இந்த படத்தில் நடிக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் மாரி செல்வராஜ் படத்தில் வடிவேலு முதல் முறையாக நடிக்க உள்ளதால் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்