நம்பிக்கை துரோகம் செய்த சிவகார்த்திகேயனுக்கு நல்லது செய்த தயாரிப்பாளர்.. இப்படியும் ஒரு மனுஷனா!

தமிழ் சினிமாவில் இன்று டாப் 5 நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன். வெறும் குறுகிய காலத்தில் முன்னணிக்கு வந்த நடிகர் ஒருவர் தான். மேலும் அந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இனி தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயனை தவிர்ப்பது மிகவும் அரிது என்பது அனைவருக்குமே தெரிந்துவிட்டது. முதலில் தொலைக்காட்சிகளில் பணியாற்றி தற்போது ஹீரோவாக உயர்ந்து சொந்தமாக படம் தயாரித்து நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

இப்படிப்பட்ட சிவகார்த்திகேயன் ஆரம்ப காலகட்டங்களில் சினிமாவில் கிடைத்த சின்னச் சின்ன வாய்ப்புகளை வேஸ்ட் செய்யாமல் பணியாற்றி வந்தார். அந்தவகையில் தெலுங்கில் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் நடித்த ஓ மை பிரண்ட் என்ற படத்தை தமிழில் ஸ்ரீதர் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

அந்த படத்தில் சித்தார்த்துக்கு குரல் கொடுத்தவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனின் துறுதுறுப்பான நடவடிக்கைகளைப் பார்த்து விட்டு அந்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு அப்போதே 5 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்து கொண்டாராம்.

sivakarthikeyan-cinemapettai
sivakarthikeyan-cinemapettai

ஆனால் சினிமாவில் மாபெரும் வளர்ச்சி பெற்ற சிவகார்த்திகேயன் தற்போது வரை அவருக்கு படம் செய்து கொடுக்கவில்லை. மேலும் அந்த தயாரிப்பாளர் போன் செய்தாலும் ஃபோன் எடுக்காமல் மற்றவர்களிடம் கொடுத்து பேசச் சொல்லி தேவையில்லாத வேலைகளை செய்துள்ளார்.

இந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு முன்னணி நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. அதற்காக மான் கராத்தே படத்தில் ஹன்சிகா மோத்வானியை ஒப்பந்தம் செய்ய ஆசைப்பட்டுள்ளார். ஆனால் ஹன்சிகா மோத்வானியின் மேனேஜராக இருப்பதே அந்த பழைய தயாரிப்பாளர் தானாம்.

கண்டிப்பாக அந்த தயாரிப்பாளர் தனக்கு உதவி செய்ய மாட்டார் எனவும், ஹன்சிகாவிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி எனக்கு கெட்ட பெயர் உண்டாகி விடுவார் எனவும் படக்குழுவினரிடம் கூறிவிட்டாராம் சிவா. ஆனால் அந்த தயாரிப்பாளரோ, பழசை மனதில் வைத்துக் கொள்ளாமல் சிவகார்த்திகேயன் படத்தில் ஹன்சிகா நடிக்க உதவி செய்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்