சிம்புவால் 9 வருடத்திற்கு முன் கைவிடப்பட்ட படம்.. மீண்டும் அதிரடி காட்டும் விஜய் பட இயக்குனர்

மாநாடு திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு சிம்பு தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மாறி இருக்கிறார். அவர் கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் இருக்கின்றன. அதோடு புது படங்களில் நடிப்பதற்கும் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் சிம்புவின் நடிப்பில் நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த படங்கள் எல்லாம் தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சிம்புவின் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கி பாதியில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் திரைப்படம் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமாக இருக்கும் நெல்சன் வேட்டை மன்னன் திரைப்படத்தை தான் முதன்முதலில் இயக்கினார்.

ஆனால் சில சில பல சர்ச்சைகளால் இந்த திரைப்படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதையடுத்து அவர் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றித் திரைப்படங்களை கொடுத்தார். அதை அடுத்து இவரின் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படமும் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இதைத்தொடர்ந்து நெல்சன் ரஜினியின் 169 வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக இயக்கயிருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தை எடுத்து முடித்து விட்டு அடுத்ததாக அவர் சிம்பு, ஹன்சிகா நடிப்பில் கைவிடப்பட்ட வேட்டை மன்னன் திரைப்படத்தை திரும்பவும் ஆரம்பிக்க இருக்கிறார்.

ஏற்கனவே சிம்புவின் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் கைவிடப்பட்டது மிகப் பெரிய வருத்தமாக இருந்தது. தற்போது இந்த திரைப்படம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கும் இந்த செய்தி அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்