சிம்புவுக்கு சிபாரிசு செய்த ஹன்சிகா.. இணையத்தில் கசிந்த தகவல்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இப்படத்தை தொடர்ந்து வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், சிங்கம்-2, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட், போகன் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து உள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா விஜய், சூர்யா, சிம்பு, விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். வாலு படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த போது இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட்டு உள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசு பேசப்பட்டது. பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஹன்சிகா அவரை விட்டு பிரிந்துவிட்டார்.

இதனால் சினிமாவில் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியுடன் ரோமியோ ஜூலியட் படத்தில் நடித்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கியதால் உடம்பை குறைத்தார். நடிகை ஹன்சிகா தமிழில் கடைசியாக 2018 ஆம் ஆண்டு விக்ரம்பிரபுவுடன் இணைந்து துப்பாக்கி முனை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் மைசூரில் துவங்கியிருக்கிறது. விக்னேஷ் சிவன் அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் இப்படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார். நயன் என் தலைவன் சிம்புக்கு தான் என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

அதை பார்த்த சிம்புவின் ரசிகர் ஒருவர் சிம்பு ஹன்சிகாவுக்கே என்று கூறியிருக்கிறார். தற்போது ஹன்சிகாவின் 50வது படமான மஹாவில் சிம்பு அவரின் காதலராக நடித்திருக்கிறார். அவரை தனக்கு காதலராக நடிக்க வைக்குமாறு இயக்குநர் ஜமீலிடம் கூறியதே ஹன்சிகா தானாம். இதனால் ஹன்சிகா, சிம்பு இடையே மீண்டும் காதல் மலருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்