இறப்பதற்கு முன் சிம்புவுக்காக கதை எழுதிய KV ஆனந்த்.. அதை படமாக்க துடிக்கும் முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்தவர் கே வி ஆனந்த். இவரது இயக்கத்தில் வெளிவந்த அயன், கோ போன்ற படங்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட்.

ஒவ்வொரு படத்தையும் தரமாக எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் கே வி ஆனந்த் சமீபத்தில் கொரானா பாதிப்பால் மரணமடைந்தது அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.

அந்த நேரத்தில் இரங்கல் தெரிவித்த சிம்பு விரைவில் இருவரும் இணைந்து பணியாற்ற இருந்த நேரத்தில் இப்படி நடந்து விட்டதே என கூறி சிம்பு மற்றும் கே வி ஆனந்த் கூட்டணியை உறுதி செய்தார். அதற்காக கதை கூட எழுதி விட்டாராம் கே வி ஆனந்த்.

கேவி ஆனந்த் கதையை படம் எடுத்தாலே தமிழ் சினிமாவில் மீண்டும் செம ரீ என்ட்ரி கொடுத்து விடலாம் என முன்னணி இயக்குனர் ஒருவர் அந்த கதையை வாங்க போராடி வருகிறாராம். அந்த கதை கிடைத்தால் அதே படத்தை சிம்புவை வைத்து எடுத்து விட்ட இடத்தை மீண்டும் பிடித்து விடலாம் என உறுதியுடன் உள்ளாராம். ஏற்கனவே சிம்பு, கே வி ஆனந்த் கூட்டணியில் கோ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

simbu-ko-movie-01
simbu-ko-movie-01

அந்த இயக்குனரும் ஒரு காலத்தில் வெற்றி படங்களை கொடுத்தவர் தான். ஆனால் சமீபகாலமாக கொஞ்சம் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கிறார். இதனால் கேவி ஆனந்த் கதையை வாங்க துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.

வழக்கமாக கே வி ஆனந்த் படங்கள் என்றாலே ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரிக்கும். இதனால் ஏஜிஎஸ் நிறுவனத்தின் மூலம் அந்த கதையை வாங்கி அவர்களையே படம் தயாரிக்க சொல்லலாம் எனவும் செம பிளான் ஒன்றை போட்டுள்ளாராம். சிம்புவும் அந்த கதை சூப்பராக இருப்பதாக அந்த அறிக்கையிலேயே அறிவித்திருந்தார். ஆக மொத்தத்தில் இந்த படம் வந்தால் இருவருக்கும் செம கம்பேக்காக அமையும் என சிம்பு மண்டையை கழுவி வருகிறாராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்