Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரட்டை வேடத்தில் சிம்பு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நடிகர் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு செக்கச் சிவந்த வானம் என்ற படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார் இதை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுந்தர் சி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மேலும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது, சுந்தர் சி படம் முடிந்த பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மாநாடு படத்திற்கு பிறகு சிம்பு-கௌதம் மேனன் இயக்கத்தில் மேலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் டபுள் ரோல் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம் இந்த தகவலை அறிந்த சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த சிலம்பாட்டம் படம் வெற்றி அடைந்தது அனைவரும் அறிந்ததே.
