தனுஷை நேரடியாக தாக்கிப் பேசிய சிம்பு.. ஹாலிவுட் போனதால் கொச்சையான வார்த்தைகளால் சாடல்!

சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் இப்போது நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் ஏறு முகத்தில் இருக்கிறது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் சிம்பு தற்போது பல சேனல்களுக்கு பேட்டி கொடுப்பதில் பிஸியாக இருக்கிறார். அதில் ஒரு பேட்டியில் அவர் கூறிய விஷயம் தற்போது சில விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பேட்டியில் அவர் நேரடியாக தனுஷை தாக்கும் விதத்தில் ஒரு சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

Also read:விஜய் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த கௌதம் மேனன்.. வெந்து தணிந்தது காடு இந்த படத்தின் காப்பியா?

அவர் கூறியிருப்பதாவது சிலர் நிறைய மொழி திரைப்படங்களில் நடித்து விட்டால் பெரிய ஆளாகி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துவிட்டால் மட்டும் பெரிய ஆளாகி விட முடியாது. என்னதான் நாம் பல மொழிகளில் நடித்தாலும் நம்முடைய வேலையில் சரியாக இருந்தால்தான் நம்மால் வெற்றி பெற முடியும்.

அப்போதுதான் நாம் பெரிய ஆளாக முடியும் என்று தெரிவித்துள்ளார். அவருடைய இந்த கருத்து தனுஷ் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே திரைத்துறையில் சிம்பு மற்றும் தனுஷ் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

Also read:சிம்புக்கு போட்டியாக டீசரை இறக்கிவிட்ட செல்வராகவன்.. சைக்கோவாக மிரட்டும் தனுஷ்

அவர்களின் திரைப்படங்கள் வெளிவரும் சமயத்தில் இரு தரப்பு ரசிகர்களுக்கும் சோசியல் மீடியாவில் சண்டை மற்றும் வாக்குவாதங்கள் ஏற்படும். அந்த வகையில் அவர்களுக்குள் இருக்கும் இந்த பனிப்போர் பல வருடங்களாக முடிவு பெறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் சிம்பு இப்படி ஒரு கருத்தை வெளியிட்டது ஏன் என்ற விமர்சனமும் தற்போது எழுந்துள்ளது. ஏனென்றால் தனுஷ் இது போன்று சிம்புவை தாக்கும் விதமாக எப்போதும் பேசியது கிடையாது. அப்படி இருக்கும்போது சிம்புவுக்கு எதற்கு இந்த வேலை என்று தனுஷின் ரசிகர்கள் கடுமையாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also read:சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்