பழையபடி சிம்புவிற்கு டிராப் ஆகும் படங்கள்.. தலைவிரித்தாடும் தலக்கணம்

குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே பல திரைப்படங்களில் நடித்து நமக்கு பரிச்சயமான முகமாக இருப்பவர் நடிகர் சிம்பு. பிறகு அவர் ஒரு  ஹீரோவாக வளர்ந்து இன்று ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதுவரை சிம்புவின் திரைப்படங்கள் இந்த அளவுக்கு வசூலை வாரி குவித்தது கிடையாது. இதனால் அவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்த படி இருக்கிறது. அதோடு தெலுங்கு, தமிழ் என பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சிம்புவை வைத்து படம் எடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இதனால் அவர் வேற லெவலுக்கு போயிருக்கிறார். பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு சினிமாவில் இப்படி ஒரு திருப்புமுனை அமைந்திருக்கிறது. ஏனென்றால் இந்த வெற்றி, புகழ் எல்லாம் சிம்புவுக்கு இப்போது கிடைத்தது தான். இதற்கு முன்பு அவர் ஒரு சர்ச்சை நாயகனாக மட்டுமே வலம் வந்தார்.

அப்போது அவரின் மீது ஏகப்பட்ட பஞ்சாயத்து இருந்தது. படப்பிடிப்புக்கு தாமதமாக வருவது போன்ற பல புகார்கள் இருந்தது. இதன் காரணமாக அவருடைய திரைப்படங்கள் வரிசையாக தோல்வியை தழுவியது. மேலும் ஒரு வெற்றிப்படம் கொடுப்பதற்கே சிம்பு கிட்டத்தட்ட திணறி வந்தார் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் மாநாடு திரைப்படம் அவருடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது. இதனால் அவர் தற்போது ஓவராக கெத்து காட்டி வருகிறாராம். அவர் வெற்றி படங்களுக்கு திண்டாடி வந்த சமயத்தில் கமிட்டான திரைப்படங்கள்தான் வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் போன்ற படங்கள் எல்லாம்.

இப்போது அந்த படங்கள் எல்லாம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. அதனால் அவர் கொரோனா குமார் படத்திற்கு தற்போது அதிகபட்ச சம்பளம் கேட்கிறாராம். மேலும் அவர் இப்போது என்னுடைய ரேஞ்சே வேற அதனால் பழைய சம்பளத்தை என்னால் வாங்க முடியாது.

நான் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதாக இருந்தால் இந்த படத்தில் நடிக்கிறேன் இல்லை என்றால் வேறு ஆளைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூலாக சொல்கிறாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். அவருடைய இந்த தலகணத்தால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய வாய்ப்பிருக்கிறது என்று திரையுலகில் தற்போது பரபரப்பாக பேசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்