திருடிய கதையை சங்கருக்கு கொடுத்து கல்லா கட்டிய கார்த்திக் சுப்புராஜ்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை

சங்கர் இந்தியன் 2 பஞ்சாயத்துகளுக்கு பிறகு தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்குவதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அதேசமயம் ஹிந்தியில் அந்நியன் படத்தை ரீமேக் செய்யவும் வேலைப்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் ஷங்கர் படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத போவதாக செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். அந்த நேரத்தில்தான் கார்த்திக் சுப்புராஜின் ஜகமே தந்திரம் படம் வெளியாகி சுமாரான விமர்சனங்களை பெற்று வந்தது.

கார்த்திக் சுப்பராஜ் கதை வேண்டாமே என ஷங்கரிடம் கதறாத ரசிகர்களே கிடையாது. இருந்தாலும் தலை கீழாகத்தான் குதிப்பேன் என கார்த்திக் சுப்புராஜிடம் ராம்சரண் படத்துக்கான கதையை வாங்கி வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்னும் சில தினங்களில் ஷூட்டிங் ஆரம்பமாக உள்ளது.

இந்த நேரத்தில்தான் கார்த்திக் சுப்புராஜ் சங்கருக்கு கொடுத்த கதை ஏற்கனவே அவருடைய உதவியாளர் ஒருவருடையது என்பது தெரியவந்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களாக இருக்கும் பலரும் கதை திருட்டில் சிக்கி வருவது வாடிக்கையாகி விட்டது.

கார்த்திக் சுப்புராஜிடம் உதவியாளராக இருந்த செல்லமுத்து, ராம்சரன் மற்றும் ஷங்கர் படத்தின் கதை என்னுடையது என தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது இதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2 படத்திலேயே ஆயிரத்தெட்டு பிரச்சனைகளை சந்தித்து நொந்துபோன சங்கருக்கு மேலும் ஒரு சோதனையாக வந்துள்ளது இந்த கதை திருட்டு பஞ்சாயத்து. எப்படியும் அந்த இயக்குனருக்கு ஒரு பெரிய தொகை கொடுத்து சரிகட்டி விடுவார்கள் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

ramcharan-shankar
ramcharan-shankar
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்