Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜென்டில்மேன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? இவர் நடித்திருந்தால் படமே வேற மாதிரி ஆயிருக்கும்
பிரம்மாண்டத்தின் உச்சத்தைத் தொட்ட இயக்குனர் என்று பார்த்தால் தமிழ் சினிமாவில் ஷங்கர் மட்டுமே. ஏனென்றால் அவர் இயக்கும் படங்களின் பட்ஜெட் மட்டுமே கிட்டத்தட்ட 100 கோடி தாண்டும். அதுமட்டுமில்லாமல் தற்போது ஹாலிவுட்டில் பயன்படுத்தும் அனைத்து டெக்னாலஜியும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தும் தலை சிறந்த இயக்குனர் என்றே கூறலாம்.
இந்தியன் படம் மட்டும் தான் கமலஹாசன் மற்றும் ஷங்கரின் கூட்டணியில் அமைந்ததாக நமக்குத் தெரியும். ஆனால் இதற்கு முன்னதாக ஷங்கரின் முதல் படத்திலேயே கமலுக்கு தான் வாய்ப்பு கொடுத்தாராம். அதாவது புகழின் உச்சத்தில் இருந்த கமலஹாசனுக்கு சங்கரின் ஜென்டில்மேன் படத்தில் நடிப்பதற்கு முதல் அழைப்பு கொடுத்தாராம்.
ஷங்கர் ஆரம்பத்தில் ஜென்டில்மேன் கதையை சொல்லும்போது பார்ப்பன பிள்ளையின் போர்க்குணம் என்பது போன்ற கதைக்களம் அமைக்கப்பட்டிருந்ததாம். அதனால் கமலஹாசன் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார், ஃபாசிசமும் இருந்ததால் தனக்கு ஜென்டில்மேன் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ஒரு பேட்டியில் தெளிவாக தெரிவித்திருப்பார்.
பார்ப்பன என்றால் முழுக்க முழுக்க பிராமண கதாபாத்திரத்தை மையப்படுத்தி இருந்ததால் தனக்கு பிடிக்கவில்லை, இதனால் சங்கரின் முதல் படம் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு கைமாறியதாம்.
ஆக்சன் கிங் அர்ஜுன் சினிமா வாழ்க்கையில் திரும்பி பார்க்க வைத்த படம் என்று பார்த்தால் ஜென்டில்மேன் படத்திற்கு மாபெரும் பங்கு உண்டு. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் மற்றும் அர்ஜுன் கூட்டணியில் முதல்வன் படம் உருவானது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கமல்ஹாசன் மட்டும் ஷங்கரின் கூட்டணியில் இந்தியன் 2 படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக தொடங்கியது ஆனால் துரதிஸ்டவசமாக படப்பிடிப்பில் நடந்த அதிர்ச்சியான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்குப் பின்னர் கமலஹாசன், ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனத்திற்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டு உள்ளதால், படப்பிடிப்பு தொடங்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
