பல வருடங்களுக்கு பிறகு நடிக்கும் ஷங்கர்.. வெளியான மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெற்றன. அதனால் தற்போது ஷங்கர் தொடர்ந்து பல படங்களை இயக்கி வருகிறார்.

ஷங்கர் தற்போது ராம்சரணுடன் இணைந்து ஆர்சி15 எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் ராஜு இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் இந்நிறுவனத்திற்கு 50வது படம் என்பதால் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் ஷங்கர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா இல்ல சிறப்பு காட்சியில் மட்டும் நடத்தி விட்டு செல்கிறார என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால் படத்தில் அவர் நடிப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

shankar ram charan
shankar ram charan

ஷங்கர் முதலில் நடிகனாக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவிற்கு வந்தார். அதுமட்டுமில்லாமல் பூவும் புயலும், வசந்தராகம் போன்ற படங்களில் நடித்துள்ளார். சீதா படத்தில் காமெடியாகவும் நடித்துள்ளார். தற்போது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் அவர் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியதையடுத்து ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இப்படத்திற்கு விஸ்வாம்பரா எனும் பெயர் வைத்துள்ளனர். இது பான் இந்தியா படமாக உருவாகி இருப்பதாகவும் இப்படத்தினை 2022ஆம் ஆண்டு வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்