திருமணமான கையோடு.. புது சீரியலில் என்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா அஞ்சன்!

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் சீரியலின் மூலம் ரீல் ஜோடியாக நடித்த சிந்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இருவரும், இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில், நடிகை ஸ்ரேயா அஞ்சன் ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தத் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி2 சீரியல் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திருமணமான கையோடு ஸ்ரேயா அஞ்சன் மீண்டும் சீரியல்களில் நடிக்க உள்ளது, ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஏனெனில் திருமணமானால் ஒரு சில நடிகைகள் நடிப்பதை நிறுத்தி விடுகின்றனர். ஆனால் ஸ்ரேயா அஞ்சன் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய நடிப்பை தொடர்வதில் அதிக ஆர்வம் காட்டுவது சின்னத்திரை ரசிகர்களால் பாராட்டப்படுகிறது.

அத்துடன் ஜீ தமிழில் கதாநாயகியாக சீரியலில் நடிக்கும் ஸ்ரேயா அஞ்சனுக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகன் யார்? என்ற தகவல் கூடிய விரைவில் வெளியாகும்.

அத்துடன் இந்த சீரியலின் டைட்டில் என்னவென்றும் இன்னும் ஒரு சில நாட்களுக்குள் வெளியாகும் ப்ரோமோவில் தெரிந்துவிடும். ஆகையால் ஸ்ரேயா அஞ்சன் நடிக்கவுள்ள புது சீரியலை குறித்து அவருடைய ரசிகர்கள் இணையத்தில் வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்