Tamil Cinema News | சினிமா செய்திகள்
சினிமாவுக்காக சின்னத்திரை நடிகை செய்த சில்லரை தனமான காரியம்.. வாய்ப்புக்காக புருஷனை மறைத்த கேவலம்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் போக்குகள் வரவர மோசமாகிக் கொண்டே இருப்பதை பிரியமான நடிகையின் பந்தாவிலேயே பார்க்க முடிகிறது. இப்போது அவரையே மிஞ்சும் அளவுக்கு இன்னொரு சின்னத்திரை நாயகி ஒரு வேலையை செய்து வைத்துள்ளார்.
பிரபலமான சீரியலில் சின்னத்திரையில் நம்பர் நடிகை என பெயர் பெற்றவர் தான் அந்த பிரபல நடிகை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவருக்கு அக்கட தேசத்தில் ஒரு படம் வெளியானது.
அதன் பிறகு சமீபத்தில் நடிகை நடிப்பில் வெளியான கடவுள் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. இதனால் நாயகிக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறதாம். சினிமாவில் பிரபலமானால் வாய்ப்புகள் வருவது ஒன்றும் புதிது இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.
அங்கு தான் நமது நாயகி வைத்துள்ளார் ஒரு ட்விஸ்ட். நாயகிக்கு சில வருடங்களுக்கு முன்னரே திருமணமாகி ஒரு கணவரும் ஒரு குழந்தையும் உள்ளனர். சீரியலில் இருக்கும்போது அதை பெரிதாக காட்டிக் கொள்ளாத அந்த நாயகி தற்போது சினிமாவுக்கு வந்தவுடன் புருஷனையும் அவருக்கு பிறந்த பிள்ளையையும் மறைத்து வைத்துள்ளாராம்.
சரி, சென்னையில் வைத்து இருந்தால் நமக்கு வயதாகி விட்டது என அனைவருக்கும் தெரிந்து விடும் என்பதற்காகவும், சினிமா வாய்ப்புகள் வராமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவும் தனது கணவரையும் குழந்தையையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டாராம்.
தற்போது திருமணமாகாத இளம் பெண்களைப் போல நடந்து கொள்கிறாராம் அந்த பிரபல நாயகி. பார்ப்பதற்கு கொஞ்சம் இளமையாகதான் தெரிவார். ஆனால் வயது முப்பதை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் ஆகியிருந்தாலும் திறமை இருந்தால் சினிமாவில் வாய்ப்பு தருவார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். இதில் குடும்பத்தை ஒளித்துவைத்து பட வாய்ப்புகளை பெற வேண்டிய அளவுக்கு சினிமா மோகம் பிடித்து அலைகிறாராம் அந்த நாயகி.
பார்க்கறதுக்கு சினேகா மாதிரி இருந்துகிட்டு பண்றதெல்லாம் நமீதா வேல.!
