Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

‘பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா’ : வைரலாகுது செல்வராகவன் – கீதாஞ்சலியின் லேட்டஸ்ட் போட்டோ !

செல்வராகவன்

தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் இவரும் ஒருவர். இளசுகளின் பல்ஸ் அறிந்து படம் எடுப்பவர். பல ஜானர்களில் படங்கள் எடுத்து நம்மை அசத்தியவர். தற்பொழுது எஸ் ஜே சூர்யாவை வைத்து எடுத்த “நெஞ்சம் மறப்பதில்லை” ரிலீசுக்காக்க காத்திருக்கிறது. மேலும் சந்தானத்துடன் “மன்னவன் வந்தானடி” மற்றும் சூர்யாவின் “NGK ” என்று பிஸியாக இருக்கிறார்.

திருமண வாழ்க்கை

இவருடைய முதல் மனைவி நடிகை சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். சில வருடம் கழித்து செல்வராகவன் தன் பேமிலி பிரென்ட் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

முதலில் குண்டாக இருந்த அஞ்சலி உடல் மெலிந்து ஸ்லிமாக மாறினார். அந்த போட்டோவையும் ட்விட்டரில் வெளியிட்டார். அந்த புகைபடத்தினை பார்த்தவர்கள் அவர்களின் கண்களையே நம்பவே முடியாத நிலை ஏற்பட்டது.

பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

‘காதல் கொண்டேன்’ படத்தில் தொடங்கி ‘இரண்டாம் உலகம்’ வரை
பெரும்பாலும் உண்மையான காதலை நோக்கிய ஓயாத தேடலில் உழல்பவை செல்வராகவனின் படங்கள். இந்நிலையில் மனிதர் தன் மனைவி பிரியும் ஏக்கம் பற்றி ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“ஆமாம். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடலை ரெகார்ட் செய்தோம்….. ஆனால் நிஜத்தில் .. உணமையாகவே அவள் வெகேஷன் செல்கிறாள், அதுவும் நான் இல்லாமல். நான் மிகுந்த அப்செட்டில் உள்ளேன். தீடீரன்று இப்பொழுது உணர்கிறேன், நான் அவளை எவ்வளவு மிஸ் செய்கிறேன் என்று. ம்ம்ம் .. இது தான் நிஜத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம்.” என்று முடித்துள்ளார்.

Gitanjali Selvaraghavan

மேலும் இத்துடன் தன் மனைவியுடன் உள்ள போட்டோ ஒன்றையும் போட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செல்வா நீங்களே மாஸ் ஹீரோ போல் இருக்குறீங்க. கூடிய சீக்கிரம் உங்க இயக்கத்திலோ, அல்லது உங்க தம்பி இயக்கத்திலோ படம் நடிங்க. நீங்களும் உங்க மனைவியும் இணைந்து ரொமான்டிக் ஆக்ஷன் படம் நடிங்க என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top