ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதா.? நெட்டிசன்களின் கேள்வியால் கடுப்பான செல்வராகவன்!

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர்களை வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்.ஜி.கே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த வரிசையில் இவர் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும், இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும், படத்திற்கான படப்பிடிப்பை 2024ஆம் ஆண்டு தொடங்க உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆதலால் நெட்டிசன்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டது என கூறிவருகிறார்கள். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்குமாறு இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

செல்வராகவன் ட்வீட்டரில் கூறியுள்ளதாவது, “படத்தின் தயாரிப்பு பணிகள் எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா.? படத்தின் தயாரிப்பாளர் யார் என்று கூறமுடியுமா.? தயவு செய்து உங்கள் நம்பகத்தன்மையான ஆட்களிடம் கேட்டு சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.

selva-raghavan
selva-raghavan

ஒரு செய்தி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது சரியானது அல்ல. எந்த ஒரு தகவலையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என பலரும் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்