தனுஷ் பட சர்ச்சை.. போட்டோ வெளியிட்டு பதிலடி கொடுத்த செல்வராகவன்

தனுஷ் கைவசம் பல படங்கள் வைத்து ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் அவர் எந்த படத்தில் எப்போது நடிக்கிறார் என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரங்களில் அடிக்கடி எழுந்து வருவதால் ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி விடுகின்றனர்.

தனுஷ் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அதே இடத்தில் மாறன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளும் நடந்து வருகின்றன. ஒரே நாளில் காலை, மாலை என இடைவேளை இல்லாமல் இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் தனுஷ்.

அதனை தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் நானே வருவேன் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது செல்வராகவன் படங்களில் நடிப்பதில் பேசியதால் தனுஷ் படத்தை கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு செய்தி வந்தது.

அதனைத் தொடர்ந்து செல்வராகவன் முதலில் சொன்ன நானே வருவேன் படத்தின் கதை பிடிக்கவில்லை என்று தனுஷ் சொல்லிவிட்டதாகவும், அதன்பிறகு ராயன் என்ற பெயரில் புதிய கதையை படமாக்க உள்ளதாகவும் கூறினார்.

இடையில் நானே வருவேன் படத்தின் தலைப்பை ராயன் என மாற்றி விட்டதாகவும் ஒரு தகவல் வந்தது. ஆனால் தற்போது படத்தின் கதையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், படத்தின் பெயர் நானே வருவேன் என்பதுதான் என்பதையும் சூசகமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படம் மூலம் தெரிவித்துள்ளார் செல்வராகவன்.

selvaragavan-cinemapettai
selvaragavan-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்