2 வருடம் காணாமல் போன சத்யராஜ்.. காரணம் கேட்டு அதிர்ச்சியான திரையுலகம்

தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பின்னர் ஹீரோவாக மாறிய பல நடிகர்களில் சத்யராஜும் ஒருவர். இவர் நடிக்கும் படங்களில் எல்லாம் நக்கல், நையாண்டி கலந்த தொனியில் அவர் பேசுவது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. அதிலும் அவர் பேசிய பல வசனங்கள் இன்றும் பிரபலமாக இருக்கிறது.

சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் குணச்சித்திர நடிகராக மாறினார். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்தது. அப்படி அவர் நடித்து மிகவும் பேசப்பட்ட ஒரு கதாபாத்திரம் தான் கட்டப்பா.

அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த சத்யராஜ் கடந்த இரண்டு வருடங்களாக எந்த திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகாமல் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் அவரது மனைவியின் உடல் நிலை தான். உடம்புக்கு முடியாமல் இருக்கும் தன் மனைவியை பார்த்து கொள்வதற்காக சத்யராஜ் புதிய படங்களில் நடிக்காமல் இருந்தார்.

ஆனாலும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட திரைப்படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. அந்த சமயத்தில் இவர் தெலுங்கில் ராதேஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் சில காட்சிகளில் சத்யராஜ் நடிக்க வேண்டி இருந்ததால் படக்குழு அவரை அணுகியது.

ஆனால் சத்யராஜ் தன் மனைவியின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். இதனால் படக்குழுவினர் சென்னைக்கே வந்து சத்யராஜ் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஒரு ஸ்டுடியோவில் வைத்து படமாக்கியுள்ளனர். இதற்காக அவர் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

தற்போது அவர் மனைவியின் உடல்நிலை தேறி வரும் காரணத்தால் சத்யராஜ் மீண்டும் புது படங்களில் கமிட்டாக தொடங்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தன் மனைவிக்காக புது படங்களை ஏற்காமல் இருந்த சத்யராஜை தற்போது ரசிகர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்