Connect with us
Cinemapettai

Cinemapettai

Nadodigal 2

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இந்த முறை தப்புவாரா சசிகுமார்? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நாடோடிகள் 2 படக்குழு

நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாக படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளிவந்த படம் நாடோடிகள். இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து இருந்தார். படத்தில் சசிகுமார், ’சென்னை28’ விஜய் வசந்த், பரணி ஆகியோர் முக்கிய நாயகர்களாக நடித்திருந்தனர். அபிநயா, அனன்யா, கஞ்சா கருப்பு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை படத்தில் ஏற்று இருந்தனர். மூன்று நாயகர்கள் தங்களின் நண்பரின் காதலுக்காக வாழ்க்கையில் பெரிய விலையை கொடுக்கிறார்கள். அத்தனை கஷ்டப்பட்டும் காதலர்கள் பிரிந்து விடுவதால் நாயகர்கள் எடுக்கும் முடிவே கிளைமேக்ஸாக அமைக்கப்பட்டு இருக்கும். இப்படம் வெளியான சமயத்தில் பெரும் வரவேற்பு பெற்றது.

தமிழ் சினிமாவில் அவ்வப்போது ஒரு ஜானர் ஹைலைட்டாக, பல இயக்குனர்கள் அதே பின்னணியில் படத்தை இயக்குவர். அந்த வகையில், கோலிவுட்டின் வெற்றி படங்கள் எல்லாம் இரண்டாம் பாகமாக உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் வழியில், நாடோடிகள் 2 படத்தை சமுத்திரக்கனி இயக்கி வருகிறார். சசிகுமார், அஞ்சலி, அதுல்யா, பரணி ஆகியோர் படத்தின் முக்கிய வேடத்தை ஏற்று இருக்கிறார்கள். இப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் படத்தை தயாரிக்கிறது. படத்தில் முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனியும் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, மதுரை என தென் மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளனர். தொடர்ந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் துவங்க இருக்கிறது. இதனையடுத்து, படத்தினை ஆகஸ்ட் மாதம் வெளியிட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக முதல் பாகத்தை போல இப்படத்திலும் கமர்ஷியல் அம்சங்கள் அதிகமாக இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top