தலைவா இப்படியே இருந்தா எப்ப கல்யாணம்.? கடுப்பாகி தன் பாணியில் பதிலளித்த சந்தானம்.!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை பக்கங்களை நிறைப்பதற்காக அவ்வப்போதைய டிரண்டிங்கில் நடிகர்கள் மாறிக்கொள்வது வழக்கம். நாகேஷ் பிறகு கவுண்டமனி செந்தில் பிறகு வடிவேலு விவேக் அடுத்து சந்தானம் சூரி இப்போது சதீஷ் யோகி பாபு என வரிசை கட்டி நிற்கும் காமெடி ஜாம்பவான்கள் பலர்.

இவ்வரிசையில் கேளிப்பேச்சுக்கும் டைமிங்கில் கலாய்க்கும் காமெடியன் இப்போது ஹீரோ சந்தானம் எப்போதும் ரசிகர்களிடம் பேசுவதை மிகவும் விரும்புபவர். மேலும் சென்னை சிலாங்கில் சிலாகித்து மிரட்டுவதில் கெட்டிக்காரரும் கூட.

இப்போதும் சந்தானம் படத்திற்கு என குறிப்பிட்ட ரசிகர்கள் காத்திருப்பதுண்டு பிரபல தனியார் தொலைக்கா்சியில் ஔிபரப்பான லொள்ளு சபா மூலம் மக்களுக்கு பரிட்சயமானவருக்கு சினிமா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது சில படங்களில் காமெடிக்குழுவில் ஒருவராக வலம் வந்தவருக்கு தனியாக காமெடி ரோல் துவங்கியது.

இப்போது சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்திருந்த சந்தானத்திற்கு ஆச்சர்யம் தந்தது ஒரு கேள்வி. ரசிகர் ஒருவர்  தலைவா இப்படியே இருந்தா எப்படி கல்யாணம் எப்போ பன்றது என கேட்டிருந்தார்.

santhanam-wife
santhanam-wife

அதற்கு பதிலளித்த சந்தானமோ தனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது என்றும் எத்தனை கல்யாணம் பன்றது  என்றும் தனது காமெடி நடையில் பதிலளித்துள்ளார். சந்தானம் சினித்துறையில் பெருமளவு பிரபலமாவதற்கு முன்பே அவருக்கு உஷா என்பவருடன் திருமணம் நடந்துவிட்டது என்று பலருக்கும் தெரியும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்