Tamil Cinema News | சினிமா செய்திகள்
உலக அழகி ஐஸ்வர்யாவின் கேரியர் பாலிவுட்டில் பாழாகிவிடும்.. 20 வருடங்களுக்கு முன்பே எச்சரித்த பிரபலம்!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். இவர் பாலிவுட்டில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஒரு சில படங்கள் நடித்துள்ளார்.
அப்படியிருக்க இவர் சினிமாவில் என்ட்ரியான போது, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் “ ஐஸ்வர்யாராயின் அழகான பக்கம் பாலிவுட்டில் நுழைந்தார் பாழாகிவிடும்” என்று மனதில் நினைத்து உள்ளாராம்.
இவர் ஏற்கனவே ஐஸ்வர்யாராயை பிரபல நாளிதழின் அட்டை பக்கத்திற்கான போட்டோஷூட்டில் பார்த்தபோது “யார் இந்த பெண் இவ்வளவு அழகு?” என்று வியந்து உள்ளாராம்.
அதன்பின் ஐஸ்வர்யாராயும் சஞ்சய் தத்தும் இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் தத்தின் மனதில் எழுந்த அந்த எச்சரிக்கை ஒலியானது அவருடைய சகோதரிக்கும் மனதிலும் ஒலித்துள்ளது.
ஆனால் ஐஸ்வர்யாராயின் நம்பிக்கை மற்றும் திறமையால் சினிமா பிரபலங்களுக்கு ஒரு சவாலான பெண்ணாக மாறிவிட்டார் என்று சஞ்சய் தத் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது சஞ்சய்தத், பச்சன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராக இருப்பதால், ‘ஐஸ்வர்யாராய் சினிமாவில் மட்டுமல்லாமல் தனது வாழ்க்கையிலும் சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்துள்ளார்’ என்று சஞ்சய் தத் வியந்துள்ளாராம்.
