Tamil Cinema News | சினிமா செய்திகள்
சண்டகோழி-2 பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமர்சனகாரர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்.!
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது, இதில் விஷால், கீர்த்தி சுரேஷ், லிங்குசாமி, ராஜ்கிரண், ஒளிப்பதிவாளர் சக்தி, எடிட்டர் பிரவீன், பார்த்திபன் என பலர் கலந்து கொண்டார்கள், இந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது விஷால் மனம் திறந்து பேசியுள்ளார்,

sandakozhi-2
அவர் பேசியதாவது” என்னுடன் 25 படங்களில் பணியாற்றிய அனைவருக்கும் முதலில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன், சண்டக்கோழி படம் முதலில் எனக்கு எழுதப்பட்ட கதையே கிடையாது, விஜய் மற்றும் சூர்யாவுக்கு எழுதப்பட்ட கதை , லிங்குசாமி எனக்கு இருபது வருடம் நண்பர் என்பதால் நான் உரிமையுடன் இந்த படத்தில் நடிக்கிறேன் என கூறினேன்.அந்த சமயத்தில் செல்லமே திரைப்படமும் வெளிவரவில்லை, சண்டக்கோழி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக என்னை இறக்கினார்கள் அதில் தொடங்கியதுதான் எனது வாழ்க்கை.
அந்த படத்தில் வரும் தாவணி போட்ட தீபாவளி பாடல் பட்டி தொட்டி எங்கும் கேட்க வைத்தது, அதே போல் பிற மாநிலத்திலும் பந்தய கோழி என்று படத்தை வெளியிட்டார்கள், இயக்குனர் லிங்குசாமி நினைத்திருந்தால் இந்த படத்தை பெரிய ஹீரோவை வைத்து முடித்திருக்கலாம், என் அப்பா நினைத்திருந்தால் படத்தை காப்பி ரைட்ஸ்க்கு பல கோடி விற்பனை செய்து இருக்கலாம், ஆனால் எனது அப்பா தெலுங்கிலும் என்னை நிறுத்த நினைத்தார் ஹீரோவாக, முதல் இரண்டு வாரத்தில் கூட்டமே இல்லை மூன்றாவது வாரத்திலிருந்து கூட்டம் அலைமோதியது, அன்றிலிருந்து 24 படம் முடிந்தது தற்போது 25 படத்திற்காக உங்கள் முன் நிற்கிறேன் சண்டக்கோழி-2 25வது படமாக அமைந்தது என்னுடைய சாதனையாக தெரிகிறது, அதேபோல் கீர்த்தி பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவரின் மற்ற படங்களை பார்த்திருக்கிறேன், மகாநதி படத்தையும் பார்த்தேன் அதை பார்த்து அவருக்கு தேசிய விருது கிடைக்கும் எனக் கூறினேன்.
அவருடன் நடித்தது மிக்க மகிழ்ச்சியைத் தந்துள்ளது அதேபோல் கட்டாயமே கீர்த்தி சுரேஷ் இயக்குனராக வலம் வருவார், வீட்டில் எங்க அப்பாவை பார்த்ததும் அதேபோல்தான் செட்டிலும் ராஜ்கிரண் சாரைப் பார்த்தேன்,
லிங்குசாமி என்னிடம் கேட்டார் இரண்டாம் பாகத்தில் சக்தி தான் கேமராமேன் உனக்கு ஓகேவா என்று கேட்டார் உங்களுக்கு யாரை தோன்றுகிறதோ அவர்களை வைத்துக்கொள் என்றேன் சக்தி மீது வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை, படத்தில் அவரின் முழு திறமையும் காட்டியுள்ளார், முதலில் என் கனவு இயக்குனராக வேண்டும் என்பதுதான் ஆனால் தயாரிப்பாளர் பிரிவின் மூலம் நான் ஹீரோவாக மாறி விட்டேன் அவர்தான் இந்தப் படத்தை எனக்கு சொன்னது.
பிரபு சாருடனோ,ராஜ்கிரன் சாருடனோ நடிக்கும் போதும் பாலா சார் இயக்கத்தில் நடிக்கும் போதும் அவ்வப்போது என்னை நானே என்னை கிள்ளி பார்ப்பேன். சண்டக்கோழி -2,பந்தையம்கோழி-2 இரண்டுமே அக்டோபர்-18ல் வெளிவரவுள்ளது.அதுவும் ஆயுத பூஜை அன்று.பெரிய அளவில் வெளிவரவுள்ளது. 2000பிரிண்ட் போட்டு கோலாகலமான திருவிழா போன்று வெளிவரும்.பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் என் நன்றி.
தயாரிப்பாளர் சங்கம் மூலமாக ஒரு வேண்டுகோள். தயவு செய்து படம் வெளி வந்து மூன்று நாள் கழித்து விமர்சனம் எழுதினால் சிறிய,பெரிய படத்திற்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்என்றார் விஷால்.
