கோடி ரூபாய் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்.. தயாரிப்பாளரிடம் அதிரடி காட்டிய சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் சமந்தா ஒரு குறிப்பிட்ட விஷயத்தை செய்யமாட்டேன் என தயாரிப்பாளரை பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட விட்ட சம்பவம் அக்கட தேசத்தில் பரபரப்பாகியுள்ளது.

சில நடிகைகளுக்கு எப்போதுமே ஒரு கொள்கை இருக்கும். அதாவது தனக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே நம்பர் ஒன் நடிகையாக வலம் வரவேண்டும் என்ற ஆசை. இவ்வளவு ஏன் நயன்தாராவுக்குகூட அந்த ஆசை உண்டு.

வயது ஏறிக்கொண்டு போனாலும் நாளுக்கு நாள் தன்னுடைய மவுசு அதிகரித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா இதுவரை ஹிந்திப் படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டதே கிடையாது. அதற்கு காரணம் ஹிந்திக்கு சென்றால் பத்தோடு பதினொன்று நாயகியாக மாறி விடுவோம் என்ற அச்சம்தான்.

அதனால் இருக்கும் இடத்திலேயே நம்பர் ஒன் நடிகையாக வலம் வருவது பெருமையை தான் என நயன்தாரா தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதே போல் தான் சமந்தாவும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை என்ற புகழே போதும் எனவும், கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் பாலிவுட் படத்தில் நடிக்க மாட்டேன் என கண்டிப்பாக சொல்லி தயாரிப்பாளரை திருப்பி அனுப்பிவிட்டாராம்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற யூ டர்ன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என தயாரிப்பாளர் கருதியதால் அவரை சந்தித்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

samantha-cinemapettai
samantha-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்