பொறுங்க, அந்த படம் ரிலீஸ் ஆகட்டும்.. சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்த காத்திருக்கும் சமந்தா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா மற்றும் சமந்தா. இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக நடிக்கும் படங்கள் சமீபகாலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. அதனால் தற்போது இவர்கள் இருவரும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்னும் படத்தில் நடித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர்கள் இருவரும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நயன்தாரா கொடிகட்டிப் பறந்தாலும் தெலுங்கு சினிமாவிலும் சமந்தாவிற்கு ஏராளமான வரவேற்பு இருந்து தான் வருகிறது. அதனால் விக்னேஷ் இருவரையும் இணைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் இரண்டிலும் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

சமீபகாலமாக சமந்தா நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல் படத்தை முழுமையாக எதிர்பார்த்து காத்து உள்ளார். அதற்கு காரணம் இப்படத்தின் வெற்றியை பொருத்து இவருடைய சம்பளத்தை உயர்த்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

samantha-vignesh-shivan
samantha-vignesh-shivan

அதாவது சமந்தா 5 இயக்குனர்களின் கதையை கேட்டு முடித்துள்ளார். ஆனால் இப்படத்திற்கான கால்ஷீட்டும் படத்திற்கான தொகையும் இன்னும் வாங்கவில்லை. காத்துவாக்குல 2 காதல் வசூலைப் பொறுத்து சமந்தா இனி நடிக்கும் படத்திற்கு சம்பளத்தை அதிகமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதால் தான் தற்போது வரை 5 இயக்குனர்களின் கதையை மட்டும் கேட்டுவிட்டு சம்பளத்தை பற்றி இன்னும் பேசவில்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்