முன்னாள் காதலர் சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் திருமணத்திற்கு கூறிய வாழ்த்து.. அப்ப விட்டுட்டு இப்ப புலம்பி என்னத்துக்கு

இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு 55 வயது ஆகியும் தற்போது வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாகவே இருந்து வருகிறார். சல்மான்கான் தனது இளம் வயதில் பல நடிகைகள் மீது காதலில் விழுந்துள்ளார்.

ஏன் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலரும் சல்மான் கான் தான். தற்போது சல்மான் கான் ஐஸ்வர்யா ராயின் திருமணத்தின்போது அளித்த பேட்டியானது சமூகவலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

ஏனென்றால் சல்மான்கான் அளித்த பேட்டியில், ‘நான் ஐஸ்வர்யாவிற்கு மிகச்சிறந்த இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என்றே ஆசைப்பட்டேன்’ என்று தனது திருமண வாழ்த்துக்களை ஐஸ்வர்யாராய்க்கு தெரிவித்திருந்தார். மேலும் பாலிவுட்டில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யாவின் காதல் வாழ்க்கை பற்றி விவாதிக்கும் போதெல்லாம் அவர்களுக்கு இடையேயான உறவு மிகவும் மென்மையானதாக இருந்தது.

எனவே அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். அதன்பின்பு அவர்களுக்கிடையான காதல் முறிவு பாலிவுட்டில் பெரிதும் பேசப்பட்டது.

எனவே சல்மான் கான் ஐஸ்வர்யாவை பற்றி அளித்த பேட்டியின்போது, கத்ரீனா கைஃப் பற்றி கேட்டபோது அவர் பதில் அளிக்க வேண்டாம் என்பதை தேர்வு செய்து மௌனம் சாதித்தார்.

அதன்பின்பு கத்ரீனா கைஃப்-க்கும் சல்மான் கானுக்கும் இடையே காதல் மலர்ந்ததால், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என பாலிவுட் எதிர்பார்த்த நிலையில், அவர்களும் பிரிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்