கையில் ரத்தக்கறையுடன் துப்பாக்கியை தூக்கி நிற்கும் செல்வராகவன்.. வைரலாகும் சாணிக் காகிதம் பட லுக்

இயக்குனராக இருக்கும் செல்வராகவன் தற்போது சாணிக் காகிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் செல்வராகவனுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாக இருந்த நிலையில் தற்போது சாணிக் காகிதம் படத்தில் படப்பிடிப்புகள் திண்டுக்கல் அருகே நடைபெற்று வருகிறது.

செல்வராகவன் பிறந்தநாளை முன்னிட்டு சாணிக் காகிதம் படக்குழுவினர் செல்வராகவனின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே செம வரவேற்பு பெற்றது.

ஒரு கையில் துண்டு பீடி, மறு கையில் துப்பாக்கி, அறை முழுவதும் ரத்தம், கால்கள் கட்டியபடி ரத்த வெள்ளத்தில் மிதக்கும் பிணம் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படு பயங்கரமாக இருந்தது.

சாணிக் காகிதம் படத்தைத் தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்கலாம் என செல்வராகவன் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தன்னுடைய கேரக்டர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அதில் கையில் ரத்தக்கறையுடன் துப்பாக்கி எடுத்து சூடும் படி போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

saani-kayidham-selvaragavan
saani-kayidham-selvaragavan
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்