பாக்கியலட்சுமி சீரியலில் ரித்திகா செய்த செயல்.. பாராட்டி தள்ளும் ரசிகர்கள்.

விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா. இதுதவிர இவர் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்று வருகிறார். இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் பாலாவுடன் சேர்ந்து கொண்டு ரித்திகா அடிக்கும் ரைமிங் வசனங்களுக்கு ரசிகர்கள் அனைவரும் அடிமை. அந்த அளவிற்கு இவர் செய்யும் குறும்புகளையும், காமெடிகளையும் ரசிகர்கள் ரசித்து வந்தனர்.

இந்நிலையில் தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடரான பாக்கியலட்சுமி சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் ரித்திகா நடிக்கத் தொடங்கினார். ஆனால் ரித்திகாவுக்கு இந்த சீரியலில் மிகவும் அமைதியான கதாபாத்திரம்.

ஆரம்பத்தில் ரித்திகா சம்பந்தப்பட்ட காட்சிகள் இந்த தொடரில் குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தான் அதிகம் காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜே விஷாலுடன் ஜோடி சேர்ந்து ரித்திகா நடித்து வருகிறார். இவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.

rithika
rithika

இந்நிலையில் ரித்திகா இந்த சீரியலில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி பாடல் பாடிய காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. அதை ரித்திகா தனது சொந்த குரலில் பாடியுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அனைவரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்