
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் வெற்றியடைந்துள்ளன. அதிலும் தமிழில் ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் தானாகவே வந்துவிடும்.
அதன்பிறகு அவருக்கு தொடர்ச்சியான பல வாய்ப்புகள் வருவது, டிவி நிகழ்ச்சிகளுக்கு கூப்பிடுவது என அந்த நடிகையை கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.
பரத் நடிப்பில் யுவன் யுவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீமா கல்லிங்கல் அறிமுகமாகியுள்ளார். அப்போது இவர் பெரிய அளவில் ரசிகர்கள் கவனிக்கப்படவில்லை என்பதால் அதன் பிறகு இவருக்கு அதிக அளவு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

ஆனால் கோ படம் வெளியான போது ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தார் ரீமா கல்லிங்கல். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் தமிழ் பட வாய்ப்புகள் வராமல் இருந்தாலும் மலையாளத்தில் ஓரளவிற்கு பட வாய்ப்புகள் வந்து ஒரு சில வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.
ஆனால் இவர் 2013ம் ஆண்டு ஆஷிக் அபு எனும் இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் கேரளாவில் குச்சிப்புடி நடனம் பள்ளியை ஆரம்பித்து நடத்திவருகிறார்.