விவாகரத்தாகி 15 வருடம் கழித்து குழந்தைக்கு தாயான ரேவதி.. 52 வயதில் ஐந்து வயது மகள் வந்தது எப்படி?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் வலம் வந்தவர் ரேவதி. தமிழில் மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்தார். மலையாள நடிகையான இவரை மண்வாசனை படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் பாரதிராஜா.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உச்சத்திற்கு சென்றார் ரேவதி. சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே சுரேஷ் சந்திர மேனன் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2013ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.

ஆனால் இவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டில் இருந்தே பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் இருந்த முக்கிய பிரச்சினையாக பார்க்கப்பட்டது ரேவதிக்கு குழந்தை இல்லை என்பது தானாம்.

இது சம்பந்தமாக இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2002ஆம் ஆண்டு பிரிந்து விட்டனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விழாவுக்கு வந்த ரேவதி தனது 5 வயதில் மகள் இருப்பதாக கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அது எப்படி இருவரும் பிரிந்து கிட்டத்தட்ட 17 வருடங்கள் கழித்து உங்களுக்கு குழந்தை? என அனைவரும் சந்தேகத்தின் பேரில் கேள்வி எடுத்தனர். ஆனால் தனக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதை ஓப்பனாக சொல்லிவிட்டார் ரேவதி.

revathi-cinemapettai
revathi-cinemapettai

ரேவதி கடந்த சில வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் டியூப் பேபி என்ற முறையில் குழந்தை பெற்றுக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த பெண் குழந்தைக்கு 5 வயது ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி காலத்தில் தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக இதைச் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்