அஜித்தோட நல்லதுக்குத்தான் அவரை வைத்து படம் எடுக்கல.. ஓபன் ஆக சொன்ன விக்ரமன்

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் பலருக்கும் ஆரம்ப காலகட்டங்களில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த விக்ரமன் அஜித்தை வைத்து ஏன் படம் எடுக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

சரத்குமாருக்கு ஒரு சூரிய வம்சம், விஜய்க்கு ஒரு பூவே உனக்காக, சூர்யாவுக்கு ஒரு உன்னை நினைத்து என அவர்களது கேரியரில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களை கொடுத்தவர் விக்ரமன். இவ்வளவேன் விஜயகாந்துக்கு கூட வானத்தைப்போல என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

அப்படிப்பட்ட விக்ரமன் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருந்தபோது அஜித்துடன் இணைய பலமுறை முயற்சி செய்துள்ளார். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு நடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்தாராம்.

அதன் பிறகு உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்ற படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் அஜித். பிறகு அஜித் வாலி போன்ற பிரம்மாண்ட வெற்றி படங்களை கொடுத்து ஆக்சன் ஹீரோவாக மாறி மிகப் பெரிய ஆளாகி விட்டாராம்.

அதிரடி ஹீரோவாக மாறிக்கொண்டிருக்கும் அஜித்துக்கு சாதாரண குடும்பப் படத்தை கொடுத்து மீண்டும் அவருடைய மார்க்கெட்டை கீழே இழுக்க வேண்டாம் எனக் கருதியே அஜித்துடன் படம் செய்வதை தவிர்த்து விட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார் விக்ரமன்.

ajith-vikraman-cinemapettai
ajith-vikraman-cinemapettai

அதுமட்டுமில்லாமல் விக்ரமன் சொன்ன ஒரே ஒரு வார்த்தைக்காக வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தபோது விக்ரம் உதவி டைரக்டரும் தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் இயக்கிய, நீ வருவாய் என படத்தில் கதை கூட கேட்காமல் கெஸ்ட் ரோலில் நடித்துக் கொடுத்தாராம் தல.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்