நெல்சனின் சுயரூபம் தெரியாத விஜய்.. அப்பாவி மனுஷன இப்படியா போட்டு கொடுப்பீங்க!

கடந்தாண்டு தமிழில் வெளியான பல படங்கள் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு தான் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான இப்படம் 100 கோடிக்கா மேல் வசூல் செய்து சிவகார்த்திகேயனை டாப் நடிகராக உயர்த்தியது.

அவரை மட்டுமல்ல நெல்சனையும் இப்படம் வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டது. டாக்டர் படத்தின் வெற்றி காரணமாக தற்போது தமிழ் சினிமாவில் நெல்சன் கவனிக்கப்பட கூடிய இயக்குனர்களில் ஒருவராக உருவாகியுள்ளார். அதுமட்டுமின்றி ரசிகர்களின் பேவரைட் ஹீரோவான தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற படத்தையும் நெல்சன் இயக்கி வருகிறார்.

தற்போது இப்படம் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது. வரும் ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தின் பட்ஜெட் எதிர்பார்த்ததை விட அதிகரித்து விட்டதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது.

அதன்படி படத்தின் இயக்குனர் நெல்சன் படத்திற்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட்டையும் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையிலேயே எட்டி விட்டாராம். தற்போது படத்தின் பட்ஜெட் அவர்கள் எதிர்பார்த்ததை விட 20 கோடி ரூபாய் வரை அதிகமாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் கேட்டதற்கு பட்ஜெட் அதிகரிக்க நான் காரணம் அல்ல. படத்தின் புரொடக்ஷன் மேனேஜர் உதயகுமார் தான் காரணம் என நெல்சன் அவரை கைகாட்டி விட்டாராம். இதனால் தற்போது தயாரிப்பு தரப்பு உதயகுமார் மீது அதிருப்தியில் உள்ளதாம்.

ஆனால் உண்மையில் உதயகுமார் நெல்சனுக்கு பல நேரங்களில் உதவி செய்துள்ளாராம். நெல்சன் சில நேரம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தாமதமாக வருவாராம். பல சமயங்களில் விஜயை கூட வெயிட் பண்ண வைத்துள்ளாராம். ஆனல் அதையெல்லாம் விஜய் காதுக்கு செல்லாமல் பார்த்துக்கொண்டதே உதயகுமார் தானாம். தற்போது அவரையே நெல்சன் போட்டு கொடுத்து விட்டார் என கோலிவுட்டில் கூறுகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்