அந்தரங்க விளையாட்டால் 2 முறை கர்ப்பமான ரசகுல்லா நடிகை.. தயாரிப்பாளர் செய்த சித்து வேலை

எல்லா மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருப்பவர் தான் அந்த ரசகுல்லா நடிகை. அதனாலேயே அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் இவர் சிக்கிக் கொள்வார். ஆனாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என என்ஜாய் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது இவர் இளம் தயாரிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்பும் வந்து கொண்டிருக்கிறது. ரகசியமாக இந்த விஷயத்தை அவர் பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாலும் எப்படியோ மீடியாவில் இந்த விஷயம் கசிந்து விட்டது.

இருப்பினும் இந்த ஜோடி இரவு பகல் பாராமல் பார்ட்டி பண்ணுவது, அவுட்டிங் செல்வது என நெருக்கத்தை வளர்த்திருக்கின்றனர். இந்த சூழலில் நடிகை அந்த தயாரிப்பாளருடன் உடன் ஓவர் நெருக்கம் காட்டியதன் விளைவாக கர்ப்பமாகி இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை வெளியில் தெரிந்தால் மானம் போவது மட்டுமல்லாமல் மார்க்கெட்டும் சரிந்து விடும் என்று அதிரடியான ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

அதாவது சினிமாவில் இன்னும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நடிகை தன் வயிற்றில் இருந்த கருவை கலைத்து விட்டாராம். இது முதல் முறை கிடையாது ஏற்கனவே நடிகை தயாரிப்பாளரின் சித்து விளையாட்டால் ஒரு முறை கர்ப்பமாகி இருக்கிறார்.

அப்போதும் அவர் இப்படித்தான் காதும் காதும் வைத்த மாதிரி அந்த கருவை கலைத்திருக்கிறார். தற்போது இரண்டாம் முறையாகவும் நடிகை இப்படி செய்திருப்பது திரையுலக வட்டாரத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த பொழப்புக்கு நடிகை அவரையே திருமணம் செய்து கொள்ளலாமே என்றும் பலர் சத்தமில்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →