பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் படத்தில் இணையும் அஞ்சலி.. இத்தனை நாள் காத்திருந்தது வீணா போகல

சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் எப்போதுமே அதிகம் தான். ஆரம்பத்திலிருந்து கலைக்குடும்பங்களில் வளர்வதாலோ என்னவோ தானாக தொற்றிக்கொள்கிறது கலையும் கலையார்வமும் கூடவே.

இப்படியான ஒரு வார்த்தைக்கு உன்னதம் சேர்க்கும் எத்தனையோ நாயகர்கள் உண்டு அப்படியான பாதையில் பயணிக்கும் ஒரு பயணி தான் நடிகர் ராம்சரனும் கூட ராஜமவுலியின் மகதீரா படத்தில் வந்தவருக்கு மீண்டும் ராஜமவுலியுடன் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இணைந்துள்ளார்.

இப்போது இந்த படத்தின் படப்பதிவு பரபரப்பாக நடந்துவரும் நிலையில் அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் இணைகிறார் நடிகர் ராம்சரன். இந்த காம்போவும் புதியது தான் என்றாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் முதல் தெலுங்கு படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

anjali-01
anjali-01

இந்த படத்தின் இன்னொரு அப்டேட்டாக நாயகன் தேர்வு செய்யப்பட்ட பிறகு நாயகிக்கான தேடல் நடந்துவந்தது. இப்போது அதற்குமான அப்டேட் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு அதன்படி நடிகை கியாரா அத்வாணி தான் படநத்தின் நாயகியாம்.

ராம்சரனுடன் 3 ஆண்டுகளுக்கு முன் வந்த “வினைய விதய ராமா” படத்தில் ஏற்கனவே நடிகை கியாரா அத்வாணி நடித்துள்ளாராம். அந்த காம்போ பிடித்துவிடவே இயக்குனர் ஷங்கரும் அந்த நாயகியவே ஒப்பந்தம் செய்துவிட்டாராம்.

தற்போது இப்படத்தில் அஞ்சலி ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் அஞ்சலி பிரபல இயக்குனர் படத்தில் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்படத்திற்கு பிறகு அஞ்சலிக்கு பெரிய அளவில் வெற்றி பெறுவார் என கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்