தம்பி நெல்சனை நம்ப முடியாது.. தலைவர் 169 படத்தில் ரஜினி எடுக்கும் அதிரடி முடிவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்புக்கு பின் தான் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் வெளியானது.

விஜய் நடிப்பில் உருவான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் தலைவர் 169 படத்தை நெல்சன் இயக்கப் போவதில்லை என்ற செய்திகள் இணையத்தில் உலாவியது. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் தலைவர் 169 படத்தின் போட்டோவை வைத்த நெல்சன் இயக்கப்போவது உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில் தலைவர் 169 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க பிரியங்கா அருள் மோகன், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இப்போது தலைவர் 169 படத்தில் கேமியோ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் 30 நிமிடங்கள் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இயக்குனர் மற்றும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தில் இணைந்துள்ளார். ரஜினியின் படையப்பா, முத்து, லிங்கா படங்களை கேஎஸ் ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நெல்சனின் டைரக்ஷன் மற்றும் திரைக்கதை ஆகியவற்றில் வேண்டிய மாற்றங்கள் மற்றும் உதவிக்காக கேஎஸ் ரவிக்குமார் இப்படத்தில் இணைந்துள்ளார். பீஸ்ட் படத்தால் நெல்சன் மீது ரஜினிக்கு நம்பிக்கை இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது கே எஸ் ரவிக்குமாரை நெல்சனுக்கு உதவி செய்யுமாறு ரஜினி நியமித்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தலைவர் 169 படம் முழுக்க முழுக்க க்ரைம் ஸ்டோரி ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதிலும் பெரும்பாலான காட்சிகள் ஜெயிலில் தான் எடுக்கப்பட உள்ளதாம். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்