கொடி கட்டி பறக்கும் அக்கட தேசம்.. மார்க்கெட்டை இழக்கும் ரஜினி, கமல், சூர்யா

ஒரு காலத்தில் ரஜினி, கமல், சூர்யா போன்றோர்க்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தது. ஆனால் தற்போது ரஜினியின் கபாலி, காலா, பேட்டை போன்ற படங்கள் தெலுங்கில் பெரிய சரிவை சந்தித்தது, அதனால் ரஜினியின் மார்க்கெட் தெலுங்கில் அடியானது. அதேபோல் சூர்யாவும் நல்ல படங்கள் தராததால் மார்க்கெட்டை இழந்தார். கமல் அரசியலில் பிசியாகியதால் அவ்வளவாக படங்கள் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் தெலுங்கு ஹீரோக்கள் பலர் தங்களது மார்க்கெட்டை அதிகப் படுத்தியுள்ளனர். தெலுங்குத் திரையுலகினர் தமிழ்நாட்டிற்கு வந்து அவர்கள் படத்தை இங்கே புரமோஷன் செய்கிறார்கள். அதன்மூலம் அவர்கள் தங்களது மார்க்கெட்டை, தமிழிலும் தக்கவைத்துக் கொள்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக பெரிய டைரக்டர், பெரிய பட்ஜெட் பான் இந்தியா படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். தெலுங்கில் இருந்து ஒரு பெரிய பட்டாளமே தமிழகம் வந்து எவ்வளவு முடியுமோ, அந்த அளவிற்கு படத்தின் பிரமோஷன் வேலைகளை செய்து விடுவார்கள்.

தற்போது ராஜமௌலியின், ஆர்ஆர்ஆர் போன்ற படங்களையும், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஸ்பா படத்தையும் தமிழகத்தில் ரிலீஸ் செய்து செம கல்லா கட்டியுள்ளனர். இதற்கு காரணம் அவர்கள் படத்திற்கு முன்னரே இங்கே வந்து அந்தப் படத்தின் ப்ரோமோஷனை வெற்றிகரமாக நடத்தியது தான்.

தற்சமயம் தெலுங்கு திரையுலகம் தமிழில் கொடி கட்டிப் பறந்து வருகிறது. அங்கே கிடைக்கும் லாபத்தை அப்படியே இங்கேயும் பார்த்து விடுகிறது. எல்லா மாநிலத்தில் இருந்தும் ஒவ்வொரு நடிகரை தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதால் தங்கள் மார்க்கெட்டை அனைத்து மொழிகளிலும் வளர்த்து விடுகின்றனர்.

ரஜினி, கமல் போன்றவர்கள் பான் இந்திய படங்களில் அதிக விருப்பம் காட்டுவதில்லை. தெலுங்கு சினிமா உலகில் தற்போது பான் இந்தியா கலாச்சாரம் பெருகி வருகிறது. தெலுங்குத் திரையுலகினர் செய்வதை இப்போதுதான் தமிழ் திரையுலகம் கடைபிடித்து வருகிறது. தற்போது விஜய் நடித்து வெளிவர இருக்கும் பீஸ்ட் படம் பான் இந்தியா படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்