விஜய்க்கு 120 கோடியா? அப்போ எனக்கு 150C கொடுத்துடுங்க.. அடுத்த படத் தயாரிப்பாளரை அதிர வைத்த ரஜினி

இப்போது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கும் போராட்டம் என்னவென்றால் ரஜினி மற்றும் விஜய் ஆகிய இருவரில் யார் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது என்பது தான். அதனால் இருவரும் தங்களுடைய அடுத்தடுத்த படங்களின் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தி வருகின்றனர்.

கடந்த நாற்பதாண்டு காலம் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது ரஜினிகாந்த் தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் வல்லவனுக்கு வல்லவன் வரத்தான் செய்வான் என்பது போல சமீபகாலமாக ரஜினியை விட விஜய்யின் படங்கள் சற்றே அதிகம் வசூல் செய்கின்றன.

அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படத்தின் வெற்றியை பொறுத்து தான் ரஜினிகாந்தின் சினிமா மார்க்கெட் குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கும் என பலரும் வெயிட் செய்து கொண்டிருக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க விஜய்யின் தளபதி 65 படம் படப்பிடிப்பில் இருக்கும்போதே தளபதி 66 படத்திற்கு 120 கோடி சம்பளம் கொடுத்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய்யை உயர்த்திவிட்டுள்ளது தெலுங்கு நிறுவனம்.

இதைக் கேள்விப்பட்டதிலிருந்து ரஜினிகாந்த் செம அப்செட். இதனால் தன்னுடைய அடுத்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திடம் முதலில் 100 கோடிக்கு சம்பளம் பேசியிருந்த ரஜினி தற்போது அதிரடியாக 150 கோடியாக உயர்த்தி விட்டதாகக் கூறுகின்றனர்.

இது ரஜினி வட்டாரங்களில் இருந்து கசிந்த செய்தி தானே தவிர அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. ஒருவேளை இந்த செய்தி பெரிய அளவில் வளர்ந்தால் கண்டிப்பாக தயாரிப்பு நிறுவனம் ரஜினி கேட்காமலேயே இந்த சம்பளத்தை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

vijay-rajini-cinemapettai
vijay-rajini-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்