கோபிக்கு ஆதரவாக இறங்கிய அம்மா.. ராதிகா எடுக்கப்போகும் முடிவு என்ன ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத்தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதாவது பாக்யாவின் கணவர்தான் கோபி என்பதை ராதிகாவுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் கோபியின் சட்டையை பிடித்து தர தரவென இழுத்து வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டார் ராதிகா. இந்நிலையில் பாக்யாவிற்கும் கொஞ்சம் கொஞ்சமாக கோபி மீது சந்தேகம் வர தொடங்கியுள்ளது. இதைப்பற்றி கோபியிடம் கேட்கும்போது அவர் சரியான பதில் கூறாமல் மழுப்புகிறார்.

என்னசெய்வதென்று தெரியாமல் பாக்யா கவலையில் இருக்கிறார். இந்நிலையில் கோபி ராதிகா வீட்டுக்கு போக முடியாது என்பதால் மயூவின் ஸ்கூலுக்கு போய் பார்த்து வருகிறார். தற்போது ராதிகா, கண்டிப்பாக பாக்கியா விவாகரத்திற்கு சம்மதித்து இருக்கமாட்டார் என்ற சந்தேகத்தில் வக்கீலை சந்திக்கிறார்.

ஆனால் வக்கீல் கோபியின் மனைவி விவாகரத்தில் உறுதியாக தான் இருக்கிறார் கண்டிப்பாக மிக விரைவில் விவாகரத்து கிடைத்துவிடும் என கூறுகிறார். இந்நிலையில் பாக்கியா ராதிகாவிற்கு போன் செய்து உங்கள் பிரச்சினை சரியாகிவிட்டதா என விசாரிக்கிறார். அது சரியாகும்னு தோனல என ராதிகா பதில் கூறுகிறார்.

உடனே பாக்யாவை பற்றி ராதிகா விசாரிக்க என்னை விட்டு எதுவும் போகிற மாதிரி இருக்கு என ரொம்ப கஷ்டமாக இருப்பதாக பாக்கியா பேசுகிறார். நம்ப ரெண்டு பேரும் இப்போ ஒரே நிலையில்தான் இருக்கும் என ராதிகா கண் கலங்குகிறார். இந்நிலையில் கோபி, ராதிகா வீட்டிற்கு வருகிறார்.

அப்போது ராதிகாவின் அம்மா, நீங்க பாக்யா கணவன் என்று சொல்லாதது தான் நீங்க பண்ணுன தப்பு என கூறுகிறாள். உடனே கோபி, சொன்னா என்ன நடக்கும்னு எனக்கு தெரியால, கண்டிப்பா ராதிகா, மயூ இருவரையும் பத்திரமாக பார்த்துக் கொள்வேன் எனக் கூறுகிறார்.

ஆனால் உடனே ராதிகா வந்த கோபியை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார். இருந்த போதும் தன்னுடைய அம்மாவின் கட்டாயத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கோபியின் மீது மீண்டும் ராதிகா அன்பு வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்