நான் டிவோர்ஸ் வாங்கிட்டு கோபியை வாங்க வச்சிரன்.. ராதிகாவின் பக்கா பிளான்!

சின்னத்திரை ரசிகர்களிடையே வித்தியாசமான கதைக்களத்துடன், அதிரடி திருப்பங்கள் நிறைந்த சீரியல்களில் ஒன்றாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியல் மாறிக்கொண்டிருக்கிறது. இதில் குடும்பத்தலைவி பாக்கியலட்சுமி, பொருளாதாரத்தில் குடும்பத்திற்கு எவ்வாறு சப்போர்ட்டாக இருக்கிறார் என்பதை ரசிகர்களுக்குப் பிடித்தமான விதத்தில் சீரியலின் இயக்குனர் காண்பித்துக் கொண்டிருக்கிறார்.

அதே சமயத்தில் பாக்கியலட்சுமியின் கணவர் கோபி தன்னுடைய கல்லூரி காதலி ராதிகாவுடன் தொடர்பில் இருந்து கொண்டு சீரியலில் அடிக்கும் லூட்டி இளசுகளுக்கு சவால் விடும் அளவிற்கு உள்ளது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக தன்னுடைய குடும்பத்தில் இல்லாத பொல்லாத பொய்களை கூறி ராதிகாவுடன் கோபி தீபாவளியை குதூகலமாக கொண்டாடினார். அப்போது ராதிகாவின் அம்மா ராதிகாவை கண்டித்தாலும், கோபியுடன் இருப்பதை ராதிகா அதிகமாக விரும்பத் தொடங்கிவிட்டார்.

எனவே ராதிகா விரைவில் தன்னுடைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டு, அதன்பிறகு கோபியையும் அவர் குடும்பத்தில் இருந்து விவாகரத்து பெற ராதிகா திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏனென்றால் அப்பொழுதுதான் இந்த ஊர் உலகத்திற்கு பதில் சொல்லும் அவசியம் இருக்காது என்று ராதிகா கச்சிதமாக காய்நகர்த்த உள்ளார். அத்துடன் ராதிகாவின் மகள் மயூ, கோபியை அவளுடைய அப்பாவாகவே நினைத்து பாசமாக பழகத் துவங்கியதால், ராதிகா கோபியை தனக்குச் சொந்தமாக முழு வில்லியாகவே மாற உள்ளார்.

இதன்பிறகு பாக்கியா ராதிகா இடையே ஆன உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டு சீரியலின் கதைக்களம் வேறொரு கோணத்தில் நகரும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்