சீண்டி விட்ட ராதிகா.. ஓவர் ஆட்டம் ஆடிய கோபி!

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தனம்-மூர்த்தி இருவரும் ராதிகாவிடம் கோபியின் குடும்பத்தை பார்த்தபிறகு அவரை திருமணம் செய்து கொள்ள ஒத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் என்ன பிரச்சனை என்பது உங்களுக்குப் புரியும் என்று நாசுக்காக பற்ற வைத்துவிட்டனர்.

இதனால் உஷாரான ராதிகா, கோபியின் குடும்பத்தினரை பார்த்தே ஆகவேண்டும் என ஒற்றைக் காலில் நிற்கிறார். ஒரு கட்டத்தில் குடும்பத்தை காட்ட முடியாது என ராதிகாவிடம் கறாராக பேசிய கோபி, வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்தினாள். விரத்தி அடைந்த கோபி, தன்னுடைய நண்பனுடன் பாருக்கு சென்று குடிக்க ஆரம்பிக்கும்போது ராதிகாவிடம் இருந்து ஆடியோ மெசேஜ் ஒன்று வருகிறது.

அதில், ‘ராஜேஷ் உங்களைவிட எவ்வளவோ மேல். அவரிடமிருந்து தப்பித்து உங்களிடம் மாட்டிக்கொண்டேன். என்னை முழுமையாக ஏமாற்றி விட்டீர்கள். சந்தோசமா இருக்கலாம் என்று பொய் சொல்லி விட்டீர்கள். உங்களுக்கும் ராஜேஷ்க்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ராஜேஷ் செய்ததை தான் நீங்களும் திரும்பி எனக்கு செய்திருக்கிறீர்கள். உங்களை நம்பி எனது மகன் மயூவை பழக விட்டது என்னுடைய தப்பு’ என்று கோபியை சீண்டி விடும் அளவுக்கு ராதிகா பேசியிருக்கிறாள்.

இதைக் கேட்ட பிறகு ராதிகா தன்னை முழுமையாக தூக்கி எறிந்து விட்டால், இதற்கு காரணம் தன்னுடைய குடும்பத்தினர் யார் என்பதை அவளுக்கு காட்டாமல் இருந்ததுதான் பிரச்சனை. அதனால் மூச்சு முட்ட முட்ட தண்ணியடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு சென்று பாக்யா தன்னுடைய மனைவி என்ற உண்மையை கோபி போட்டு உடைத்துவிட்டார்.

அதுமட்டுமின்றி குடிபோதையில் மயூவிடம் கோபி பேச முயற்சித்தபோது ராதிகா கோபத்தில் கற்றுக் விடுகிறாள். பாக்யா கோபியின் மனைவி என தெரிந்ததும் ராதிகா நிலை குலைந்து என்ன செய்வது என தெரியாமல் இடிந்துபோய் விடுகிறாள்.

இதன்பிறகு கோபி தன்னுடைய உச்சக்கட்ட நடிப்பை அரங்கேற்றி பாக்யா உடன் இவ்வளவு நாள் சந்தோசமாக வாழ வில்லை என்பதை ராதிகாவிற்கு புரியவைத்து அவளையே திருமணம் செய்துகொள்ள முயற்சிப்பான்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்