நடுத்தெருவுக்கு துரத்தப்பட்ட கோபி.. அடுத்தவன் பொண்டாட்டி ஆசைப்பட்டா இப்படித்தான்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. ஒரே நேரத்தில் மனைவிக்கு தெரியாமல் காதலியையும், காதலிக்கு தெரியாமல் மனைவியையும் சமாளித்து வருகிறார்கள் நம்ம கோபி அங்கிள். அதிலும் அவர் கொடுக்கும் திருட்டு முழிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் குடித்துவிட்டு ராதிகா வீட்டுக்கு வரும் கோபி தன் மனக் குமுறலை கொட்டித் தீர்க்கிறாள். மேலும் செமபோதையில் இருப்பதால் தன்னை அறியாமல் இதுதான் என்னுடைய ஃபேமிலி போட்டோ என ராதிகாவிடம் காட்டுகிறார். அதைப்பார்த்த ராதிகா அதிர்ச்சியில் உறைகிறார்.

பாக்யாதான் உங்கள் மனைவியா, அதற்காக தான் இவ்வளவு டிராமா பண்ணிங்களா என கதறுகிறார் ராதிகா. மேலும் இத்தனை நாள் எங்களை ஏமாற்றினீர்களா என கோபியை தரதரவென இழுத்து தெருவில் தள்ளுகிறார். ஆனால் கோபி அழுதபடி உனக்காக தான் எல்லாம் செய்தேன் என கூறுகிறார்.

வீட்டில கட்டுன பொண்டாட்டி இருக்கும்போது அடுத்தவன் பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டா இப்படி நடுத்தெருவுக்கு தான் வரனும் கோபி அங்கிள். ஆனால் ராதிகா வீட்டை விட்டு விரட்டி விட்டாலும் பாக்கியா கோபியை வீட்டுக்குள் அழைத்து சேவைகள் செய்கிறார்.

ஆனால் குடிபோதையில் இருக்கும் கோபி, ராதிகாவின் பெயரை மட்டும் சொல்லாமல் தன் முன்னாள் காதலியை பற்றி வருந்துகிறார். அதன்பிறகு பாக்யாவிடம் ராதிகா தன் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறுகிறாள். உடனே பாக்கியா தன் கணவன்தான் ராதிகாவின் காதலன் என தெரியாமல் ராதிகாவை சமாதானப்படுத்துகிறார்.

ஆனாலும் ராதிகா, பாக்யாவை நினைத்து குற்ற உணர்ச்சியில் துடிக்கிறார். மேலும் மீண்டும் ராதிகாவை சந்திக்க கோபி வந்தால் அவருக்கு மரண அடி காத்திருக்கிறது. இவ்வாறு பல சுவாரசியமான திருப்பங்களுடன் இந்த வார பாக்கியலட்சுமி தொடர் வர இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்