இந்த இரண்டு விஷயத்தில் கோட்டை விட்ட ராதிகா.. அதனாலதான் இப்படி டாப்ல இருக்காங்க

பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா. அந்தக் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் போன்ற முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரையிலும் பல ஹிட் தொடர்களை கொடுத்துள்ளார் ராதிகா. தற்போது தன் கணவர் சரத்குமாருடன் அரசியலிலும் பிசியாக உள்ளார். ஆனால் ராதிகாவின் முதல் இரண்டு திருமணங்களும் தோல்வியை சந்தித்தது.

ராதிகா தயாரிக்கப்பட்டு பிரதாப் போத்தன் இயக்குனராக அறிமுகமான படம் மீண்டும் ஒரு காதல் கதை. இப்படத்தில் பிரதாப் போத்தன் மற்றும் ராதிகா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மனநிலை சரியில்லாத இருவரின் உறவை பற்றி வெளிப்படுத்தும் கதை.

மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் ராதிகா சரசுவாகவும், பிரதாப் போத்தன் குப்பியாகவும் மனநிலை பாதிக்கப்பட்ட ஆசிரமத்தில் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு போதே பத்திரிக்கையில் ராதிகா, பிரதாப் போத்தன் பற்றிய கிசுகிசுகள் தான் வெளியாகும்.

அதன்பிறகு ராதிகா, பிரதாப் போத்தன் இருவரும் 1985 இல் திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டு வெளியான இவர்களது படமும் தோல்வியை சந்திக்க, இவர்களது திருமண வாழ்க்கையும் ஒரு வருடத்திற்கு உள்ளேயே முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு ராதிகா, ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராதிகாவுக்கு இந்த வாழ்க்கைப் பயணமும் சில வருடங்களிலேயே முடிந்தது. அதன் பிறகு 2001இல் நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண பந்தம் தற்போது வரை மகிழ்ச்சியாக செல்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்