நெருங்கிய நண்பர்களை பிரித்த அந்த விஷயம்.. கமல், ராதாரவியின் நட்புக்கு வந்த சோதனை

சினிமாவில் வில்லன், குணச்சித்திரம் என்று பல கேரக்டர்களில் நடித்து வருபவர் பிரபல நடிகர் ராதாரவி. அவர் நடிப்பு மட்டுமின்றி அரசியலிலும் கலக்கி வருகிறார். அதேபோல் அவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பளிச்சென்று போட்டு உடைப்பவர்.

இதனால் அவர் பல சர்ச்சைகளையும், பிரச்சனைகளையும் சந்திப்பது வழக்கம். ஆனால் அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தன் கருத்துக்களை சர்ச்சையான விதங்களில் பேசி வருகிறார். அப்படி அவர் பேசிய ஒரு விஷயம் தான் அவருடைய நண்பரை அவரிடம் இருந்து பிரித்து விட்டது.

ராதாரவி சினிமாவில் பல திரைப்படங்களில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் நடிப்பு என்பதையும் தாண்டி ஒரு நெருங்கிய நட்பு இருந்தது. ஆனால் இந்த நட்பு ராதாரவி, கமல் குறித்து பேசிய சில விஷயங்களால் முடிவுக்கு வந்துவிட்டது.

கடந்த வருட தேர்தலின் போது ராதாரவி பாஜகவுக்கு ஆதரவாக கோயம்புத்தூரில் பிரச்சாரம் செய்தார். அந்த தொகுதியில் தான் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து பேசிய ராதாரவி மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை பேசி விட்டார்.

கமலுக்கு வெளிநாட்டுக்காரர் என்ற நினைப்பு, அங்கு ஒரு கல்யாணம் இங்கு ஒரு கல்யாணம் பண்ணுகிறார். தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாமல் கைவிட்டவர் எப்படி மக்களை காப்பாற்றுவார். அவரைப் போன்று தானே அவரது வாரிசுகள் இருக்கும் என்றெல்லாம் அவருடைய குடும்பத்தை இழுத்து மிகவும் மோசமாக பேசி விட்டார்.

அதுமட்டுமல்லாமல் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்தும் மிகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. மேலும் அவருக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த அரசியல் காரணமாக அதோடு அவர்களுடைய நட்பு முறிந்து விட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்