கர்ப்பம் என பிளாக் மெயில் பண்ணும் சைக்கோ.. பாக்யாவிடம் கையும் களவுமாய் மாட்டிய செழியன்

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில் பழைய குருடி கதவைத் திறடி என்பதற்கேற்ப பாக்கியா வீட்டிற்கு திரும்பவும் கோபியை கூட்டி வந்துவிடுகிறார் மாமியார். அத்துடன் கோபியை தொடர்ந்து ராதிகாவும் பாக்யா வீட்டிற்கு வந்து அழிச்சாட்டியம் பண்ணுகிறார். இதையெல்லாம் பார்த்து கண்டு கொள்ளாமல் குடும்பத்தில் உள்ளவர்கள் வேடிக்கை பார்ப்பது தான் ரொம்பவே ஆச்சரியமாக இருக்கிறது.

அடுத்ததாக மாலினி, செழியன் தன்னை அவாய்ட் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் அவரை பயமுறுத்துவதற்காக இரண்டு பேரும் சேர்ந்து இருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை காட்டி செழியனை பிளாக் மெயில் பண்ணுகிறார். அத்துடன் இந்த வீடியோக்களை நான் ஜெனிக்கு அனுப்பி விட்டுட்டேன் என்று செழியனுக்கு போன் பண்ணி சொல்கிறார்.

இதனை கேட்ட செழியன் ரொம்பவே பதற்றம் ஆகிறார். அதன் பின் இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்று முடிவு பண்ணி மாலினி வீட்டிற்கு சென்று நீ யாருக்கு வேணாலும் வீடியோவை அனுப்பிக்கோ எனக்கு அதை பத்தி கவலை இல்லை. நான் பண்ணிய தப்புக்கு என் குடும்பத்தில் உள்ளவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்க தயாராக இருக்கிறேன்.

நீ என்ன சொல்வது நானே என் வீட்ல எல்லோரிடமும் சொல்கிறேன் என்று மாலினியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி சரிதான் போடி என செழியன் வீட்டை விட்டு கிளம்பி விடுகிறார். இதனால் பித்து பிடித்தது போல் முழு சைக்கோவாக மாலினி மாறிவிடுகிறார். அதன் பின் எப்படியாவது செழியனை நம் பக்கம் கொண்டு வர வேண்டும் என்று பிளான் பண்ணுகிறார்.

அடுத்தபடியாக பாக்யாவிற்கு பழைய மாதிரி சமையல் ஆர்டர் வருகிறது. அதற்காக பாக்யா மற்றும் செல்வி அனைவரும் கோவிலுக்கு போகிறார்கள். போன இடத்தில் செழியனும் அங்கே வருகிறார். ஆனால் அங்கே பாக்கியா இருப்பதை பார்த்துவிட்டு யாருக்கும் தெரியாமல் ஒளிந்து ஒளிந்து போகிறார். ஆனால் இதை செல்வி அக்கா பார்த்து பாக்கியாவிடம் சொல்லிவிடுகிறார்.

எதற்காக செழியன் கோவிலுக்கு போயிருக்கிறார் என்றால் மாலினி போன் பண்ணி நான் கர்ப்பமாக இருக்கிறேன். உடனே உன்னை பார்க்கணும் நீ கோவிலுக்கு வா என்று கூப்பிட்டு இருக்கிறார். இதை நம்பி செழியனும் வந்திருக்கிறார். ஆனால் வந்த இடத்தில் பாக்யாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார். இனி நடந்த அனைத்து விஷயங்களையும் செழியன் பாக்யாவிடம் ஒன்று விடாமல் சொல்லப் போகிறார். இதன் பிறகாவது இந்த மாலினிக்கு பாக்கியா முடிவு கட்டினால் நன்றாக இருக்கும்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்