விஜய் என்ன பெரிய கடவுளா.. தளபதி ரசிகர்களை சீண்டிய பிரபல தயாரிப்பாளர்

சமீபகாலமாக பிரபல தயாரிப்பாளர் தமிழ் திரையுலக நடிகர்களை வம்பிழுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் நடிகர் விஜய்யை பற்றி சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு வரிசையாக பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றிய கருத்துக்களை தயாரிப்பாளர் ராஜனிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த ராஜன் தமிழ் திரையுலகம் என்பது ஒரே குடும்பம் போன்றது. ஒரு ஆட்டோகாரன் கூட சக ஆட்டோகாரனுக்கு பிரச்சனை என்றால் உடனே வருவான். ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கும் ஹீரோக்கள் படத்தில் நடித்து முடித்து சம்பளம் வாங்கினால் போதும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை சக நடிகருக்கு ஒரு பிரச்சனை என்றால் எதிர்த்து குரல் கொடுக்க கூட யாருக்கும் வக்கு இல்லை என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இருக்கும் நடிகர் சங்கத்தில் ஆளுமை சரியாக இல்லை என்றும் இதற்கு முன்பு இருந்த நடிகர் சங்க தலைவர்கள் விஜயகாந்த் மற்றும் சரத்குமார் திறமையானவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இப்பொழுது நடிகர் சங்கம் அவர்களின் நிர்வாகத்திற்கு கீழ் இருந்தால் இந்நேரம் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருப்பார்கள்.

இதற்கு முன்பு கூட நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்த பொழுது அவருக்கு ஆதரவாக நான் அறிக்கை வெளியிட்டு இருந்தேன். மற்ற நடிகர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக எந்த கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இதற்காக ஒரு நன்றி கூட நடிகர் விஜய்க்கு வக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

இப்பொழுது இருக்கும் நடிகர்கள் அனைவருக்கும் தாங்கள்தான் திரையுலக கடவுள் என்று நினைத்துக் கொள்கின்றனர் என்றும் கூறியுள்ளார். அவருடைய இந்த பேச்சால் நடிகர் விஜயின் ரசிகர்கள் கொதிப்பில் உள்ளனர். தயாரிப்பாளர் ராஜனுக்கு எதிராக ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்