Connect with us
Cinemapettai

Cinemapettai

prabhas-rahman-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்.. அநியாயத்திற்கு கொள்ளையடிக்கிறாரே என புலம்பல்!

பிரபாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் பாகுபலி படங்களின் வெற்றிதான்.

ராஜமௌலி இயக்கிய அந்த படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் பிரபாஸின் அடுத்தடுத்த படங்கள் பேன் இந்தியா படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த படம் பெரிய அளவு விமர்சன ரீதியாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக ஜாக்பாட் அடித்தது. அதனைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களையும் pan-india படமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்த வகையில் அவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் ராதே ஷ்யாம். முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்த வைரல் ஆனது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என பிரபாஸ் ஆசைப்படுவதாக செய்திகள் வெளிவந்தது.

அது சம்பந்தமாக அவரிடம் பேசியதற்கு சுமார் 4 கோடி சம்பளம் கேட்கிறாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாஸ், ஆசைப்பட்டதற்காக இப்படியா கொள்ளையடிப்பதா என விரக்தியில் உள்ளாராம்.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படங்களுக்கு அவ்வளவாக ஏ ஆர் ரகுமான் இசையமைக்க விரும்பியது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தயாரிப்பு நிறுவனம் 4 கோடி கொடுக்க ரெடியாக இருந்தாலும் பிரபாஸ் சற்று பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டாராம்.

Continue Reading
To Top