தன்னைத் தூக்கி விட்டவரிடம் நோ சொன்ன பிரபாஸ்.. வளர்த்த கிடா மார்பில் முட்டுது!

பாகுபலி படங்களின் மூலம் உலகளவில் பிரபலமான ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படம் கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

சுதந்திர போராட்ட கால கட்டத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் வேடத்தில் நடித்து வருகின்றனர். மேலும் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் போன்றோரும் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு கம்மியாக இருப்பதை உணர்ந்த பட குழுவினர் சமீபத்தில் நட்பு எனும் பிரமோஷன் பாடலை வெளியிட்டனர். இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியானது.

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. முன்னதாக பாகுபலி படத்திற்கு சரியான தேதி பார்த்து ரிலீஸ் செய்த ராஜமௌலி இந்தமுறை RRR படத்திற்கு சரியான ரிலீஸ் தேதி கிடைக்காமல் தவித்து வந்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இப்படம் சங்கராந்தி வெளியீடாக ஜனவரி 2022ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதே தினத்தில் தான் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷ்யாம் படமும் வெளியாகி உள்ளது. இதனால் RRR படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதையடுத்து பிரபாஸிடம் ராதே ஷியாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் வைத்தாராம் ராஜமௌலி. ஆனால், படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்ததால், இதற்கு மேலும் ரிலீஸ் தேதியை மாற்றிவைக்க முடியாது என தயாரிப்பாளர் மறுத்துவிட்டாராம்.

rajamouli-cinemapettai
rajamouli-cinemapettai

தன்னை தூக்கிவிட்டவருக்கே நோ சொல்லிவிட்டாரே என டோலிவுட்டில் முணுமுணுக்கிறார்களாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்