பண போதையில் கெட்ட பழக்கத்திற்கு அடிமையான பவர்புல் நடிகர்.. பத்து பைசா இல்லாமல் இறந்துபோன பரிதாபம்

ஒரு மனிதனுக்கு பணமும், புகழும் கிடைத்தால் கெட்ட பழக்கமும் வந்து விடும் என பலர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். சிலர் இதற்கு விதிவிலக்காக இருந்தாலும் பலரின் வாழ்க்கை பணத்தால் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகருக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டுள்ளது.

அதாவது 90களில் வெளியான பெரும்பான்மையான படங்களில் இவருடைய கால்சூட் குதிரைக்கொம்பாக இருந்தது. அப்படி தன்னுடைய சிறந்த நடிப்பால் அடுத்தடுத்த படங்களில் புக் ஆகி பணத்தையும், புகழையும் சம்பாதித்தார். ஆனால் அதை அவரால் நீடித்து வைத்துக் கொள்ள முடியவில்லை.

தான் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமாக பணமும், புகழும் கிடைத்ததால் குடி, போதை பொருள் என எல்லா கெட்ட பழக்கத்திற்கும் அடிமையாகி விட்டார். அதுமட்டுமின்றி இந்த கெட்ட பழக்கத்தினாலே தனக்கு கிடைத்த பணம், புகழ் என அனைத்தையுமே இழந்து விட்டார். அதன் பின்பு பணம் நெருக்கடியால் சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் அவதிப்பட்டு உள்ளார்.

ஒரு நாடோடி போல ஊர் ஊராக அலைந்து திரிந்துள்ளார். அந்த நடிகர் அப்போது இவ்வாறு கஷ்டப்பட்டு வருவதாக செய்தித்தாள்களில் தகவல் வெளியானது. மேலும் தன்னுடைய கடைசி காலத்தில் 10 பைசா கூட பணம் இல்லாமல் நடிகர் சங்கம் வாசலில் இறந்து கிடந்துள்ளார். இது திரைத்துறையில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ஏனென்றால் ஒரு காலகட்டத்தில் நிற்கக் கூட நேரமில்லாத அளவு ஓடிக்கொண்டிருந்த நடிகருக்கா இந்த நிலைமை என பலரும் கூறினார். அதுமட்டுமின்றி பணமும், புகழும் சேர்ந்து போதையில் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறிவிடும் என்பதற்கு அந்த நடிகரே ஒரு எடுத்துக்காட்டாக இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →